Saturday, January 26, 2013

Paristamil Tamil News - இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும் பிரான்ஸ்!!! (தாக்குதல் காணொளி)

Paristamil Tamil News - இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும் பிரான்ஸ்!!! (தாக்குதல் காணொளி)


தாங்கள் அறியாமல் பேசிக் கொண்‌டிருக்கிறீ்ர்கள். உலகில் விடுதலை இயக்கங்கள் தோன்றி, திசைமாறிய பறவைகளாக, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டன. நீங்கள் சொல்வது போல் தமிழ் பேசும் மக்களின் உரிமையை வென்றெடுப்பதாகத் தொடங்கப்பட்ட ஆயுதக்குழுக்கள், புலிகளின் கொடுவாளுக்குப் பலியாகி அழிந்தன. சில மறைந்தன. சில மாறின. அந்த இயக்கத்தில் முஸ்லிம்கள் சிலரும், கத்தோலிக்கர் சிலரும் இருந்தனர் என்பதும் உண்மையே! ஆனால், வடக்கு முஸ்லிம்களை எவ்வித காரணமுமின்றி, அவர்களது உடமைகள் அனைத்தையும் கொள்ளையடித்து, வெற்றுக்கையினராக, கொலைப் பயமுறுத்தலுடன், வரலாறு காணாத ஒரு இனச் சுத்திகரிப்பை மேற்கொள்வதற்கு சில மாதங்களுக்கு முன்னரேயே, அவர்களுடன் இருந்த முஸ்லிம் போராளிகளை வெளியேற்றினர்.

அது ஒரு புறமிருக்க, விடயத்திற்கு வந்தால், ““இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும் பிரான்ஸ்!!! ““ மேற்கண்ட தலையங்கத்திற்குக் கீழ் எழுதப்பட்ட கருத்து, மாலியில் ஒரு போராளிக் குழு பற்றியது. போராளிக்குழு எந்த மதத்தைச் சார்ந்தது என முஸ்லிம் அல்லாத வேறு மதத்தவர்கள் ஈடுபடும்போது, அவர்கள் மதத்தால், கத்தோலிக்க, கிறிஸ்தவ, இந்து, பௌத்த என மதீயாக அவர்களை அழைப்பதில்ல‌ை. புலிப்பயங்கரவாதிகள் எனக் கூறினார்களே தவிர, இந்து பயங்கரவாதிகள் என பத்திரிகை உலகு எழுதுவதில்லை என்பதே உண்மை. இது போன்று ஐஆர்ஏ ‌யை கிறிஸ்தவ பயங்கரவாதிகள், மாவோ, சிவசேனா போன்ற பயங்கரவாதிகளை இந்துப் பயங்கரவாதிகள் என அழைப்பதில்லை. மேலும் விளக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். ஆனால் ஊடகப் பயங்கரவாதம் என இதனை நான் கூறுகிறேன்.

அதனாலேயே, சகோதரர் Imran Mohamed என்பவர் தனது ஆதங்கத்தை எழுதினார். உண்மையில் அவர் இனவாதம் பேசவில்லை. இனவாதக் கருத்தாக “இஸ்லாமிய பயங்கரவாதம்“ மாலி போராட்டத்துக்குப் பெயர் சூட்டியது, பரிஸ் தமிழ் தான். அதுதான் இனவாதக் கருத்தை வெளியிட்டது. அதனையே அவர் கண்டித்திருந்தார். அது சற்று தரக்குறைவான முறை என்பதே எப்போதும் எனது கருத்து.

தாங்கள், இனவாதத்தைச் சாடுபவராக இருந்தால், சாடியிருக்க வேண்டியது, பரிஸ் தமிழையே தவிர, சகோதரர் இம்றான் அவர்களை அல்ல். அந்த வகையில் நீதியாகக் கண்ணோட்டமிட்டால், உண்மையாக நீங்களும், பரிஸ் தமிழ் போன்று இனவாதத்தையே கக்கியுள்ளீர்கள்.

உண்மையில், உண்மையை அறிய வேண்டியவர் தாங்களே என்பதே யதார்த்தம். வடக்கில் ஒட்டுமொத்தமாக, கிழக்கில் மூதூரில் புலிகள் நடத்திய இனச்சுத்திகரிப்பு, வணக்க ஸ்தலத்துக்குள்ளே குழந்தைகள், முதியோர் எனப் பாராது வணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோரை க் கொன்று குவித்த போது கூட, இந்து, கத்தோலிக்க பயங்கரவாதிகள் என முஸ்லிம்கள் அழைக்கவில்லை. பத்திரிகைகள் எழுதவில்லை. புலிகள் என்றே கூறினர் என்ப‌தே போதும், இனவாதம் பேசுவோர் யார் என்பதை அறிந்து கொள்ள. தயவு செய்து பழைய தமிழ், ஆங்கில தினசரிகளைப் பாருங்கள் உண்மை புரியும். தற்போதைய தினசரிகளின் இனவாதப் போக்கு புரியும்

No comments: