Thursday, December 12, 2013

இலங்கை முஸ்லிம்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்: SLTJ

Commented by nizamhm1933 on http://tinyurl.com/q2oyk74

Lankamuslim.org


இலங்கை முஸ்லிம்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்: SLTJ

புலிகளால் 1990 கடைப்பகுதியில் பலவந்தமாக, கொலை அச்சுறுத்தலுடன், உடமைகளை அபகரித்துக் கொண்டு, விரட்டியடித்து இனச் சு்த்திகரிப்பை மேற்கொண்டமை உலயேயறிந்த, உலகில் முதன் முதல் நடைபெற்ற கொடுமை. அதற்கே இது வரை தீர்வு இல்லாத போது, தீர்வு பற்றிச் சிந்திக்கவே முற்படாத போது, மறக்கப்பட்ட காரணியாகி, மடமாற்றத்துககு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், காணாமற் போனவ்ர்க்ள பற்றி்க கூறி என்ன பயனைப் பெற்றுக் கொள்ளப் போகின்றனர் முஸ்லிம்கள்!

இந்நாட்டில் முஸ்லிம்கள் இனி வாழ முடியுமா என்ற  பரிதவிப்பில் செய்வதறியாது திகில் பூண்டில் மிதித்தவர்களாக இருக்கும் தருணத்தில், தமது பழைய துன்பங்களைப் பற்றி முறைப்பட்டுக் கொண்டிருக்க முடியுமா!

ஏற்கனவே கட்டவிழ்த்து விடப்பட்ட காடையர்களால் நடத்தி முடிக்கப்பட்ட அராஜகங்களை நியாயப்படுத்தும் வேலையும், அப்படி எதுவுமே  நடக்கவில்லை அத்தனையும் அப்பட்டமான பொய்ப்பிரச்சாரங்கள் எனக் கூறிக் கொண்டிருக்கும் முஸ்லிம் மந்திரிகள் உள்ள இந்நாட்டில்,  காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக எடுக்கும் முயற்சி விழலுக்கிறைத்த நீரே  !

சில புதுமுகங்களால்,  தாய்மார்கள்தம் உறவினர்களைக் காணவில்லை எனச் செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்கள்,  ஆதாரமற்றவை எனக் கூறும் அளவிற்கு நிலைமை கீழிறங்கி இருக்கும் போது, இது போன்ற ஆணைக்குழு விவகாரங்கள் வெறும் கண் துடைப்பாகவே இருக்கப்  போகின்றது.  முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் அவர்களது இனங்களே துரோகிகளாக இருக்கும் நிலையில் நீதியை எதிர்பார்ப்பது மலடி பிள்ளை பெற்ற கதையாகத்தான் இருக்கப் போகின்றது!

No comments: