Saturday, December 15, 2012

Paristamil Tamil News - இறுதிக்கட்ட யுத்தத்தில் ஒரு இலட்சத்து ஆறாயிரம் மக்களை காணவில்லை: ஆதாரபூர்வமாக வரும் சாட்சியம்

Paristamil Tamil News - இறுதிக்கட்ட யுத்தத்தில் ஒரு இலட்சத்து ஆறாயிரம் மக்களை காணவில்லை: ஆதாரபூர்வமாக வரும் சாட்சியம்


சிறீ லங்கா விவகாரத்தைப் பற்றிப் புதிதாக எதையாவது கூறிப் புகழ் சேர்த்தும், பொருள் சேர்த்தும் வருவது தற்போது சாதனை போன்றும், வியாபாரமாகவும் நடைபெறுகின்றன.

நடந்து மு‌டிந்ததை மிகைப்படுத்திக் கூறி, இங்கு பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிராமல் உருப்படியாக எதையாவது பாதிக்கப்பட்டு தற்போது உயிரோடு வாழவழியின்றித் தவிக்கும் மக்களுக்கு தேவைப்பட்டதை தற்போது செய்யுங்கள்.

உண்மையில் இலங்கை சிறுபான்மைத் தமிழர் விடயத்தில் அக்கறை கொண்டவர்கள் யாராவது இருந்தால், அவர்கள் இங்கு வாழும் இம்மக்கள் சமவுரிமையுடன், கௌரவமாக வாழுவதற்கான வழிமுறைகளை வெளிப்படுத்துங்கள். அதற்காக எழுதுங்கள். குரல் கொடுங்கள். அவையே தற்போது இம்மக்களால் வேணடப்படுவது. இந்நாட்டுக்கும் தேவைப்படுவது.

இதைவிடுத்து குட்டையைக் குழப்பி மீன்பிடிக்க நினைப்பதும், குளிர்காய நினைப்பதும், புகழும் பொருளும் சேர்க்க முயல்வதும்  மகா கொடுமைகள். நடந்து முடிந்ததைக் கூறிக் கொண்டிருப்பதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்பட்டுவிடப் போவதில்லை, தீமையைத் தவிர. யார் யாரோ கூறுபவை எல்லாம் ஒரு நாட்டில் நடந்த யுத்தத்தை அளக்கும் அளவு கோலாகிவிட முடியாது. அதுவே குற்றத்தைத் தீர்மானிக்கும் ஆதாரமாகவும் மாறமுடியாது. ஆதாரபூர்வமாக நிறுவப்பட முடியாதவை ஏலவே உள்ள உண்மைகளினதும் பெறுமதியைக் குறைக்க வைத்துவிடும்.

Benefiting out of others' distress is the worst crime in the world.

No comments: