Tuesday, October 15, 2013

இதய சுத்தியுடன் செயற்பட்டால் இல்லையென்று எதுவுமில்லை-ஜனாதிபதி

Commented by nizamhm1944 on      http://tinyurl.com/q6boeqp

Beru News

இதய சுத்தியுடன் செயற்பட்டால் இல்லையென்று எதுவுமில்லை-ஜனாதிபதி


மாகாண சபைகள் மத்திய அரசுடன் ஒத்துழைக்காமல் போகும் சந்தர்ப்பங்கள், அம்மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குத் தடையாக அமைந்துவிடக் கூடாது என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அது அரசின் தார்மீகக் கடமை.

அரசியல் காரணங்கள் எதுவும், எவ்விதத்திலும் நாட்டின் எப்பகுதி மக்களையும் பாதிப்பதாக அமைந்து விடக் கூடாது. மக்களது வரிப்பணத்திலேயே அரசு இயங்குகின்றது. அச்சீரிய பணியை நிறைவேற்றுவதற்காக அரசிடம் மக்கள் பொறுப்பைக் கையளித்துள்ளனர். அப்பொறுப்பு நம்பிக்கையின் மத்தியில் அளிக்கப்பட்டுள்ள அமானிதம்.

No comments: