Wednesday, October 23, 2013

2014 நிதியாண்டுக்கு ரூ. 154,252 கோடி ஒதுக்கீடு

Commented by nizamhm1944 on http://tinyurl.com/llqbj2w

Lankamuslim.org

2014 நிதியாண்டுக்கு ரூ. 154,252 கோடி ஒதுக்கீடு


ரூபா 154 ஆயிரத்துக்கும் அதிகமான கோடிகள் அடுத்த ஆண்டு பாதுகாப்புக்காகச் செலவிட ஒதுக்கப்பட்டுள்ளது.  இது ஏறத்தாழ நாளொன்றிற்கு 422 கோடிக்கு மேல். 

உண்மையில், எந்த நாடும் இந்த நாட்டைப் பிடித்துவிடப் போகின்றது என்ற நிலையிலோ, வல்லரசாக வேண்டும் எ்னற நிலையிலோ இந்நாடு இருக்கவில்லை.  இந்நாட்டின் சிறுபான்மையினர் பிரச்சினை மனிதாபிமானமாகத் தீர்த்து வைக்கத் தவறியதாலும், அவர்களது உரிமைப் போராட்டத்தை அடக்கி, ஒடுக்கி அழித்து விடலாமென நினைத்ததாலும் உருவானதே  தமிழர்களின் ஆயுதப் போராட்டம். அதனைத் தொடர்ந்த பயங்கரவாதமும், உயிரழப்புக்களும். 

அதன் காரணமாகவே பாதுகாப்புக்காக் இவ்வளவு பெருஞ்சுமை மக்கள் மீது சுமத்தப்படுகின்றது. இதில் கோடிகளை கொள்ளை கொள்ளும் கேடிகளும் இலாபமடைகின்றனர். ஆனால் மக்கள் தினந்தினம் வெந்து வேகுகின்றனர், வாழ்ககையை ஓட்டிக் கொள்ள முடியாமல்.   

தமிழர்களின் பிரச்சினை தாராள மனங் கொண்டு தீர்க்கப்பட்டு விட்டால் இப்பணம் அப்படியே மிச்சமாகிவிடும். இதனால் மீதப்படுத்தப்படும் 150, 000 கோடி ரூபாய்களை, இருபத்தைந்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதாயின், ஒரு மாவட்டத்திற்கு ஆறாயிரம் கோடி ரூபாய்கள் சென்றடையும். ஒரு வருடத்திலேயே இந்நாட்டை சொர்க்க பூமியாக மாற்றிவிடலாம். 

வேண்டியதெல்லாம் நல்லெண்ணமும், தமிழரும் இந்நாட்டவர்களே, அவர்களுக்கும் சரிசமாமாக வாழும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே! 

No comments: