Saturday, September 14, 2013

புலியின் இடத்தை பூனைகள் நிரப்ப முடியாது: சீமான் ஆவேசம்

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/nwymw73

in Paris Tamil

புலியின் இடத்தை பூனைகள் நிரப்ப முடியாது: சீமான் ஆவேசம்

யார் இந்த அழையாத விருந்தாளி!  இலங்கை பற்றிக் கருத்துக்கூற, இலங்கைத் தமிழருக்கு என்ன வேண்டும் என்பதைத் தீர்மானிக்க!

இலங்கைத் தமிழர் மிகத் தெளிவானவர்களும், அறிவானவர்களும். சீமான் இலங்கைத் தமிழர்களின் கோமான் என நினைத்துவிட்டதோ! பாவம் அதை இங்குள்ள தமிழர்கள் கோமாளியாகவே பார்க்கின்றார்கள்.

மத்திய அரசு இலங்கை விடயத்தில் தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை ஏற்படுத்தித் தந்தது. அதற்கு எதிராகப் புலிகள் யுத்தம் செய்து, மக்களையும். அப்பாவி இளைஞர்களையும், சொத்துக்களையும் காவு கொடுத்து விட்டு, தாங்களே முன்னின்று, அவர்களால் விதேசியத் தேர்தல் என விமர்சித்த அதே தேர்தலில், தமது ஆடக்ளை நிறுத்தி, கள்ள வாக்குப் போட்டு காரியமாற்றிய திலிருந்து, அவர்களே தங்களது எதிர்ப்புக் கொள்கையை, தமிழீழக் கோரிக்கையை கைவிட்டி ருந்தமை எங்கே இந்த மரமண்டைகளுக்குப் புரிகின்றது.

தனது முட்டாள் தனத்தை, மக்கள் புரிந்து கொள்ளாத விதமாக சாதுரியமாக மறைத்து, எதனை வேண்டாம் என மக்களைக் கொன்று குவித்தார்களோ அதனையே வேறு பெயரில், மாகாண சபை வேண்டாமென்றவர்கள், இடைக் கால நிர்வாக சபை வேண்டுமென்று கேட்டுத் தோல்வியடைந்தனர்.

இந்திய அரசு தேர்தலில்லாமல், வடக்கு கிழக்கு மாகாண சபையைப் புலிகளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தது. அதனைக் கூட ஏற்காமல் அனைத்து சந்தர்ப்பங்களையும் தவற விட்டு, இறுதியில் இணைந்த இரு மாகாணங்களையும்,  இழந்தவர்கள்தான் புலிகள். இந்த யதார்த்தம் கோமாளிகளுக்கு விளங்குவதில்லை. 

No comments: