Tuesday, June 18, 2013

குர்ஆன் வழியில் ...


நல்லொழுக்கமுள்ள பெண்கள் பணிந்தே நடப்பார்கள்

இவ்வசனத்தின் மூலம் பணிவு என்பது நல்லொழுக்கத்தின் பாற்பட்டது என்பது மிகத் தெளிவு. ஆயினும், பல விளக்கங்களையும் பல்வேறு பண்புகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. பால், வயது, அந்தஸ்து, தரம், பதவி, இடம் போன்ற பல்வேறு தன்மைகளை வைத்து பணிவின் பண்பு அனுமானிக்கப்படலாம் அல்லது  வேறுபடுத்தப்படலாம். 

மிருகங்களில் இருந்து மனிதரை வேறுபடுத்திக் காட்டுவதில் முக்கிய இடத்தை ஒழுக்கமே வகிக்கிறது. மனிதர் புனிதராவதற்கும் ஒழுக்கமே வேண்டப்படுகின்றது. ஏன் மனிதர் மனிதரென மதிக்கப்படுவதற்கும்கூட ஒழுக்கமே அவசியமாகின்றது. நாயகத் திருமேனி நபிகள் நாதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு இறைவன் தன் அருள்மறையில் கொடுத்த நற்சாட்சிப் பத்திரம் ஒழுக்கம் பற்றியதே. 68:4 வசனம், 'நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தின் மீது இருக்கிறீர்'.  

இன்றுங்கூட உத்தியோகங்களுக்கு செல்வோரிடம் இருந்து அவர்கள் கல்வித் தாரதரத்துக்கு மேலாக ஒழுக்கத்தைக் குறிப்பிடும் நற்சான்றுப் பத்திரம் கேட்கப்படுகின்றது. கல்விகற்ற பாடசால அதிபரின் நற்சாட்சிப் பத்திரம் வேண்டப்படுகின்றது. அவர்களது ஒழுக்கம் பற்றி அறிவதற்காக உறவினரல்லாத இரு மத்தியஸ்கள் கேட்கப்படுகின்றனர். இவையெல்லாம் நடைமுறை வாழ்வில் ஒழுக்கத்தின் இன்றியமையாமையை உணர்த்தவல்லன.  

ஓழுக்கமில்லாதோர் உயர்குடியில் பிறந்திருந்தாலும் மனித அந்தஸ்துக்கு உரியவர்கள் அல்லர். அதுபோன்றே ஒழுக்கமற்ற மனிதன் எவ்வளவு கல்வி கேள்விகளில் உயர் நிலையை அடைந்திருந்தாலும் மனிதனாக மதிக்கப்படுவதில்லை. மிகச் சிறந்த வீரம் கொண்டவனும் மனிதனுக்குரிய ஏற்கப்பட்ட ஒழுக்கம் குன்றியவனாக இருந்தால் மனிதருள் வைத்துப் பார்க்கப்பட மாட்டான். உலகின் அதிக செல்வத்தைக் கொண்டவனும் ஒழுக்கம் கெட்டவனாக இருப்பானேயாகில் அவனும் மனிதருள் ஒருவனாக கணிக்கப்படுவதில்லை. 

ஆனால், உயர் குடியில் பிறக்காமலும், இழிபிறவியாக இருந்தாலும், கல்வி, செல்வம், வீரம் போன்ற எதுவும் அற்றவனாக இருந்தாலும் கூட அவனிடம் நல்லொழுக்கம் மட்:டுமே காணப்படுமாயின், அவன் மனிதருள் மட்டுமல்ல தேவருள்ளும் வைத்து எண்ணப்படுகிறான்.

மேற்கண்ட, 'நல்லொழுக்கமுள்ள பெண்கள் பணிந்தே நடப்பார்கள்' என்ற தலையங்கம் அல்குர்ஆனின் பெண்கள் என்ற நான்காம் அத்தியாயத்தின் 34ஆம் வசனத்தின் ஒரு பகுதியாகும். நல்லொழுக்கமுள்ள பெண்கள் எதற்கு? யாருக்கு? எங்கு? எப்போது? ஏன்? பணிந்தே நடப்பார்கள் என்பதும் இங்கு அறியப்பட வேண்டியதே! 

இந்தக் கேள்விக்கு அனைத்துக்கும் பணிந்து நடப்பார்கள் என ஓரே பதிலாகக் கூறினும் அது பெண்ணின் உயர் பண்பையே காட்டி நிற்கும். பெண் என்பது மென்மை என்ற தன்மை சார்ந்தது என்பதை விளங்கிக் கொள்ளும் எவருக்கும் இதனை விளக்கிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதனை அவர்கள் இலகுவாக விளங்கிக் கொள்வர். அதனை ஏற்காதவர்களுக்கும் விளக்க வேண்டியதில்லை. 

அப்படியான விளக்கம் கொண்டோருக்காகவே இக்கட்டுரையும் எழுதப்படுகிறது. ஏற்காதோரைப் பலவந்தப்படுத்தல் இஸ்லாம் அனுமதிக்காத ஒன்று. ஆக ஏற்பவருக்கேதான் குர்ஆனிய உபதேசங்களைக் கூறும்படி அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். 

சிலர், தமது கருத்தாக, அப்பெண் ஒழுங்காகத் தன் கடமைகள் அனைத்தையும் தன் கணவனுக்கு, பிள்ளைகளுக்கு, பெற்றாருக்கு, மற்றோருக்கு செய்கின்றாள்தானே அதற்கு மேல் வேறு என்ன பணிவு வேண்டிக்கிடக்கிறது என சிந்திப்பதையும் அறியவே செய்கிறேன். இங்கு பணிவு என்பதற்கு அவர்கள் கொண்டுள்ள கருத்தே, அவர்களை அப்படி எண்ண வைத்துள்ளது என்பதே எனது ஓரே பதில். 

தலையங்கத்தை ஊன்றிக் கவனிப்போர், உய்த்துணர்வோர், பணிந்து நடத்தல் என்ற பதம் ஓர் பண்புசார் தன்மை என்பதைக் குறிப்பதையும், அப்பண்பு குடி கொண்டோர் உயர் அந்தஸ்தைப் பெற்றுக் கொள்வரே தவிர, குறைமாதராகக் கொள்ளப்படுவதில்லை என்பதையும் அறிவர்.  அப்போது அவர்களது மேற்கண்ட கேள்வி இல்லாதொழிந்துவிடும். விளக்க மின்மையால் ஏற்படுபவை விளக்கம் கிடைத்ததும் மறைந்து விடுவது இயற்கையே! நிலை உயரும்போது பணிவுகொண்டால் உலகம் உன்னை வணங்கும் என்ற சினிமாப்பாடல்கூட இதனை ஒட்டியதே! 

இறைவனையே நாம் உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வேமாயின், பணிவு என்ற சொல்லின் கருத்துச் செறிவு வெளிப்படும். இறைவனது, நான் உங்கள் அழைப்புக்கு பதில் கூறுவேன். நான் உங்கள் பார்வைக்குள் வந்துவிடுவேன். நான் உங்கள் நடையாகிவிடுவேன். நான் உங்களுடனேயே இருந்து உங்களுக்கு பாதுகாப்பைத் தந்து கொண்டிருப்பேன். உங்களைப் பாதுகாப்பது நமது கடன், உங்களுக்கு வழிகாட்டுவேன் போன்ற பல வசனங்கள் இறைவனின் பணிவு என்ற பண்பை விளக்குகின்றன. 

இவை அவனைக் கீழ்நிலைக்குத் தள்ளியுள்ளனவா என்றால் அது மாறாக அவனின் உயர் தன்மையை, மக்களில் அவன் கொண்டுள்ள அக்கறையை, கருணையை, காருண்யத்தை, அன்பை, அரவணைப்பை, மனித நேயத்தை, நேசத்தை வெளிப்படுத்தி நிற்கின்றது. உயர்ந்த நிலையில் இருக்கும் போது பணிவு கொண்டவனாக இருப்பதனால்தான் இறைவன் அனைவராலும் வணங்கப்படுகிறவனாக இருக்கிறான். அவனிடம் இக்குணங்கள் மட்டும் இல்லாதிருக்குமாயின் அவன் அனைவராலும் வணங்கப்படுபவனாக இரான். 

இந்த உண்மையை அவன் நுண்ணறிவாளனாக இருப்பதனால் அறிந்து வைத்து நம்மை யெல்லாம் அவனை வணங்கும்படி செய்துள்ளான். இதனையே அனைத்துப் பெண்களுக்கும் கடைப்பிடிக்குமாறு கூறி அவர்களின் அந்தஸ்தை உயரும்படி செய்துள்ளான். அதற்கும் காரணம்  இல்லாமாலில்லை. 

உலகில் பிறந்த ஆதம், ஏவாள் தவிர்ந்த அனைவரும் பெண்களான தாயால் வெளியானவர்கள் என்பதால் அவர்களை உயர்வான இடத்தில் வைக்க இறைவன் கையாண்ட இலகு வழி எனக் கூறின் அது பொருத்தமாவே இருக்கும். தாய்க்கு எப்போது அவமானம், தரக்குறைவு ஏற்படுகின்றதோ அப்போது அது முழு உலகத்தையும் பாதித்து விடும். அவ்வவமானம் அனைவருக்கும் உரியதே! தாய் என்ற அந்தஸ்தைப் பெறக்கூடிய பெண் அவமானம் வராமல், அதனால் அகில உலக மக்களும் அவமானம் அடையாமல் பாதுகாக்க நல்லொழுக்கமுள்ள பெண் மதிநுட்பமாகப் பணிந்தே நடப்பாள்.  ஆக தாய்மார் அனைவரும் பெண்களே என்பதனால் அவர்களுக்கு மேற்கண்ட ஆலோசனையை மிக நுட்பமாக அறிவித்துள்ளான். 

தர்க்க ரீதியாக நல்லொழுக்கமுள்ளோர் பணிந்தே நடப்பர் என்ற இறை கூற்று, பணிந்து நடப்போர் நல்லொழுக்கம் உடையோர் என்ற கருத்தைத் தருவதோடு பணிந்து நடவாதோர் நல்லொழுக்கம் அற்றவர்கள் என்ற கருத்தியலுக்குள் அடக்கப்பட்டு விடுகின்றனர். எல்லா இடத்திலும், எல்லோ ரிடத்திலும், எல்லா சந்தர்ப்பங்களிலும் பெண்கள் பணிந்து நடப்பது அவர்களது உயர் பண்பை வெளிப்படுத்துவதோடு, அவர்களுக்கு அதியுயர் கௌரவத்தையும் அளித்துவிடும். அல்ஹம்துலில்லாஹ்.

கொழும்பு 03

2012.07.05                           - நிஹா -  



இறை இருப்பை அறிவிக்கும் அறிவியல் உண்மைகளும்; இறைவெளிப்பாடுகளும்

இறை இருப்பை அறிவிக்கும் அறிவியல் உண்மைகளும்; இறைவெளிப்பாடுகளும்


இப்பேரண்டத்தைப் வடிவமைத்து, படைத்து, விரிவுபடுத்தி, இற்றைவரை பரிபாலித்துவரும் வல்ல இறைவன் நாம் வாழும் இப்புவியை அமைத்துள்ள விதம் அவனது இருப்புக்குச் சான்று தருவனவற்றுள் முதன்மையானது. 2:117. வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி, தானே உண்டாக் கினான்;. 27:61. இந்தப் பூமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும், அதனி டையே ஆறுகளை உண்டாக்கியவனும், அதற்காக (அதன் மீது அசையா) மலைகளை உண்டாக்கியவனும் இரு கடல்களுக்கிடையே தடுப்பை உண்டாக்கியவனும் யார்? இது சம்பந்தமாக விளக்கங்கள் தரப்புகின் அது தொடர் ஆகிவிடும். அதனால் சிலவற்றைக் கூறுகிறேன்.  

ஆரம்பத்தில் எல்லாம் புகைமண்டமாகவே இருந்தன. 41:11. பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்.  புவியின் அளவமைப்பு செம்மையானது அல்லது பரிபூரணமானது. குர்ஆன் 87:2. அவனே படைத்துச் செவ்வையாக்கினான்.. அதற்கென்றே உள்ள ஈர்ப்பு சக்தி, நைட்ரஜன், ஹைட்ரஜன் இரண்டு வாயுக்களையும் பெருமளவில் அடக்கியுள்ள ஓர் படையைத் தன்னைச் சூழவைத்துக் கொண்டுள்ளது.  தனக்கு மேலான விண்பரப்பில் ஐம்பது மைல் அளவிலான தொலைவு வரை  இந்தப் படையை விரித்துக் கொண்டுள்ளது. 15:85. நாம் வானங்களையும், பூமியையும், இவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் உண்மையைக் கொண்டே அல்லாது படைக்கவில்லை. 

இப்புவிக்கோள் தற்போதைய அளவைவிட சிறிதாக இருந்திருந்தால், வெள்ளிக்கிரகம் போன்று, உயிரின வாழ்வுக்குத் தேவையான ஓர் சூழலைக் கொண்டிருக்க முடியாமல் ஆகியிருக்கும். மாறாகப் பெரிதாக  இருந்திருந்தால், ஜுபிட்டரைப் போன்று ஹைட்ரஜன் வாயுவை அதிகமாகக் கொண்டு உயிர்கள் வாழ இயலாக் கிரகமாகிருக்கும். ஆக பூமி மட்டுமே மனிதர், உயிரினங்கள், தாவரங்கள் வாழக்கூடிய தன்மைக்கேற்ற விதமான சரியான விகிதப்படியான வாயுக்களின் கலவையைக்  கொண்டுள்ள கிரகமாகும். 

 பூமி சூரியனிலிருந்து சரியான தூரத்தில் அமைந்துள்ளது. அதனால் இதற்கு -30 பாகை முதல்  120 பாகை வரையான வெப்பத்தைப் பெறுகிறது. சூரியனிலிருந்து தற்போதைய தூரத்தைவிடக்கூடிய தூரத்தில் அமைந் திருக்குமாயின், இக்கிரகம் உறைவு நிலையை அடைந்திருக்கும்.  இன்னும் நெருக்கமாக அமைந்து இருந்திருந்தால் அனைத்தும் எரிந்து சாம்பராகி இருக்கும். தற்போதைய அமைவிலிருந்து ஒரு சிறு பிறழ்வு அதாவது கூடியோ குறைந்தோ மாற்றம் ஏற்படின் இது வாழமுடியாக் கிரகமாகிவிடும். 27:61. இந்தப் புமியை வசிக்கத் தக்க இடமாக ஆக்கியவனும்,  இப்படி அமைந்துள்ள இக்கிரகமானது சூரியனைச் 67,000 மைல் வேகத்தில் சுற்றிக் கொண்டிருப்பினும்,  தனக்கும் சூரியனுக்கும் இடையிலான தூரத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. மேலும் இது தன்னைத்தானே ஓர் அச்சில் சுழற்றிக் கொண்டு இருப்பதன் மூலம் தன்னை எப்போதும் சூடாகவும் குளிராகவும் வைத்திருக்கும் பாங்கை உருவாக்கிக் கொண்டுள்ளது. 32:5. வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்து கிறான். இரவு பகல் மாறிமாறி வரும் பண்பைக் கொண்டுள்ளது. 10:6. நிச்சயமாக இரவும், பகலும் மாறி வருவதிலும், வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ் படைத்துள்ளதிலும் பயபக்தியுள்ள மக்களுக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. இதனால் நாட்களைக் கணித்து வருடங்களைக் கண்டு கொள்ள உதவுகிறது. அத்தோடு இப்பூமி சரியான அளவிலும், தூரத்திலும் அமைந்த சந்திரனைத் தனது துணைக் கிரகமாகக் கொண்டு உயிர்க் கிரகமாக உள்ளது. அதனால், சந்திரன் தனது ஈர்ப்பு சக்தியால், சமுத்திரங்கள் கண்டங்களை நீர் மூடிவிடாது கட்டுப்படுத்திக் கொண்டு இருக்கிறது. மேலும் அது மாதங்களைக் கணக்கிடும் தன்மையையும் பெற்றுத் தருகிறது. சூரிய மறைவின் போது உலகுக்கு சூரியனது வெளிச்சத்தைப் பெற்றுத் தருகிறது. - புவியின் சுழற்சியால் சந்திரனில் ஏற்படுத்தப்படும் உருவ மாற்றம் நாட்களை மிகத் துல்லியமாக கணித்து மாதங்களைக் கணித்துக் கொள்ள உதவுகிறது. 10:5. அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை..

நீர், நிறம், நாற்றம், சுவையற்றது என்பதை நாம் அறிவோம். அது இன்றேல் எந்த உயிரினமும் உயிர் வாழமுடியாது என்பது புதுமையும் அன்று. இறைவன் சகல உயிரினங்களையும் நீரிலிருந்தே படைத்துள்ளான் என்பதை அனைத்து உயிரினங்களிலும் தாவரங்களிலும் நீர் அமைந்துள்ள அளவால் அறியலாம். நீரிலிருந்தே சகல உயிரினங்களையும் தான் படைத்துள்ளதாகக் கூறும் இறைவன் ஆரம்பத்தில் தனது ஆட்சி நீரில் இருந்ததாக எடுத்தியம்பு கின்றான்.  24:45. மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்;.  மனித உடல் மூன்றில் இரண்டு பங்கு நீரைக் கொண்டு இருப்பது அதை உறுதி செய்யும்.  நீரின் தன்மை எந்தளவுக்கு வாழ்வுக்கு பொருத்தமாக உள்ளது என்பதைப் பார்ப்போம். 

அது உயர் வெப்ப எல்லையையும், உறையும் தன்மையையும் கொண்டது. நீரே வெப்ப மாற்றங்களை ஏற்படுத்தும் பிரதான காரணியாகின்றது. மேலும் அதுவே நமது உடற் சூட்டை 98.6 பாகையாகக் கட்டுப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறது. நீரே பேரண்டத்துக்கும் தீர்வாக உள்ளது. இத்தீர்வுத்  தன்மையானது  ஆயிரக்கணக்கான இரசாயனங்கள், கனிப் பொருட்கள், ஊட்டச் சத்துக்கள் போன்றவற்றைச் சுமந்து  சென்று உடலினுள் அமைந்துள்ள மிகச்சிறிய நரம்புகளுக்குக் கூட வழங்குகிறது. நீர் இரசாயனச் சார்பற்றதும்கூட. அது தான் சுமந்த செல்லும் உணவு, மருந்து, கனியுப்புக்கள் போன்ற  பொருட்களின் தன்மையில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது, நமது உடல் அதன் அப்பொருட்களின் தன்மையிலேயே உறிஞ்சுவதற்கு உதவுகிறது. 43:11. அவன்தான் வானத்திலிருந்து மழையை அளவோடு இறக்கி வைக்கிறான். பின்னர், அதனைக் கொண்டு இறந்து கிடந்த பூமியை நாம் தாம் உயிர்ப்பிக்கின்றோம். 

நீர் 100 பாகைக்கு மேல் கொதிப்படைந்தால் ஆவியாகும் தன்மையைக் கொண்டிராவிடில் நமக்கு ஆரம்பத்தில் தரப்பட்ட நீரே இன்று வரை இருந்திருக்கும். உபயோகிக்க முடியாத அளவுக்கு தன்மையில் மாற்றத்தைக் கொண்டிருக்கும். அதுவே நோய்களைப் பரப்பி உயிர்களைக் காவு கொள்ளும் முதன்மைக் காரணியாக இருந்திருக்கும். நீர் ஆவியாவதன் மூலம் தன்னைத் தானே சுத்திகரிக்கும் ஆற்றலை வழங்கியவன் இறைவனே. 32:27. அவர்கள் (இதையும்) கவனிக்கவில்லையா - நிச்சயமாக நாமே வரண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாகத் தண்ணீரை ஓட்டிச் சென்று அதன் மூலம் இவர்களும் இவர்களுடைய கால் நடைகளும் உண்ணக்கூடிய பயிர்களை வெளிப்படுத்துகிறோம்; அவர்கள் நோட்டமிட வேண்டாமா?

நீரின் இயங்கும் தன்மைகள் மிகப் பெறுமதி வாய்ந்தவை மட்டும்ல அளவிலாதது. அதன் தன்மையால் அது தாவரங்களில், ஈர்ப்பு விசைக் கெதிரான வழியில் கீழிருந்து மேல் நோக்கிச் சென்று போஷிக்கின்றது. மிக உயர்ந்த மரங்களுக்குக் கூட அதன் உச்சிவரை சென்று தன் வேலையைச் செய்கிறது. 39:21. நீர் பார்க்கவில்லையா? அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப் படுத்துகிறான்.  மேலும், குளிர் காலத்தில் தனது உறைவு நிலையில் கூட அது,  நீர்மட்டத்தின் மேற் பகுதியில் இருந்து உறைந்து, அதன் மிதக்கும்  தன்மையால் நீரின் மேலேயே மிதந்து, தன் அடிப்பகுதியில் கடல் வாழ் உயிரினங்கள் வாழும் நிலையை உருவாக்குகிறது. 

ஒளியை உள்வாங்கும் தன்மை போன்ற இன்னோரன்னவையும் இவ்வகைத்தே. மேலும், கடல்களில் பல்வேறு தன்மை, சுவை, ஒன்றினுள் ஒன்று நுழைந்து விடாதபடி கண்ணுக்குத் தெரியாத தடுப்பு ஒன்று ஏற்படுத் தப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் நம்பகமாக ஏற்றுக்கொண்டுள்ளனர். இதை குர்ஆன் கூறுவதும், இதை அந்தகார இருளில் ஆழ்ந்திருந்த கிபி ஆறாம் நூற்றாண்டில் ஓர் மனிதன் கூறி இருக்க முடியாது. அதனால் மனித அறிவுக்கு அப்பாற்பட்டு நிற்கும் ஒன்றே கூறி இருக்கவேண்டும் எனவும் அதனை இறைவன் என்ற பதத்தால், அப்படி ஒன்று இருக்கவே வேண்டும் எனவும் ஒத்துக் கொண்டுள்ளனர். 25:53. அவன்தான் இரு கடல்களையும் ஒன்று சேர்த்தான்; ஒன்று, மிக்க இனிமையும் சுவையுமுள்ளது. மற்றொன்று உப்பும் கசப்புமானது - இவ்விரண்டிற்குமிடையே வரம்பையும், மீற முடியாத ஒரு தடையையும் ஏற்படுத்தியிருக்கிறான்.

23:18. மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம்; நிச்சயமாக அதனைப் போக்கிவிடவும் நாம் சக்தி உடையோம்.  இப்புவியில் காணப்படும் நீரில் 97 சதவீதம் சமுத்திரங்களிலேயே காணப்படுகின்றது.  87:3. மேலும், அவனே அளவுபட நிர்ணயித்து நேர்வழி காட்டினான். ஆனாலும், நமது புவி அந்த நீரில் காணப்படும் உப்பைத் தான் உறிஞ்சிக் கொண்டு உயிரினங்கள் உட்கொண்டு வாழ்வதற்கேற்ற நீராக மாற்றி வழங்குவதற்கான ஓர் அமைப்பைத் தன்னில் கொண்டுள்ளது.  நீரை ஆவியாக்கும் தன்மை நீரின் உப்புச் சுவையை சமுத்திரத்திலேயே விட்டு வைத்து, அதனை மேகமாக்கி, காற்றினால் இழுத்துச் செல்லப்பட்டு பூமிக்கு வழங்கி அதன் வரட்சியைக் போக்கி,  மனிதர், மிருகங்கள் ஆதியாம் அனைத்தும் வாழச் செய்கிறது. நீரின் இச்சுழற்சி முறை மூலம் நீர் தூய்மைப்படுத்தப்படுவதுடன், மீண்டும் நீர் பிரயோகத்துக்கு ஏதுவாக மாற்றப்பட்டு இங்கு உயிர் வாழும் சூழலை ஏற்படுத்தி நமது இருப்புக்கு உதவுகிறது. 56:69. மேகத்திலிருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்குகிறோமா? 56:70. நாம் நாடினால், அதைக் கைப்புள்ள தாக்கியிருப்போம்.

மனிதருக்கு மட்டுமல்ல அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்வாழக் காற்றே இன்றியமையாத தேவையாகிறது. அதுவே உயிர்நாடியாகும். இவ்வத்தியா வசியம் கருதியே இறைவனும் இவ்வைம்பூதங்களையும் பொதுவுடமை ஆக்கியுள்ளான்.  எனினும் மனிதன் நினைத்தால் காற்றைத் தவிர மற்றைய அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம். ஆனால் எந்தச் சக்தியாலும் எப்போதும் காற்றை மட்டும், சிறு அளவில் தவிர, தமது கட்டுப்பாட்டுக்குள் கொணரமுடியாது, அல்லாஹ்வைத் தவிர. '42:33. அவன் விரும்பினால் காற்றை (வீசாமல்) அமர்த்தி விடுகிறான்.' மேகத்திற்கு நீரை இழுத்துச் சென்று கருவுற்ற மேகங்களாக மாற்றுவதும், 15:22. இன்னும் காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாமே அனுப்புகிறோம்;..... அவைகளை நினைத்த இடத்துக்கு இழுத்துச் சென்று மழையாகப் பெய்விப்பதும் காற்றுத்தான் என்பதை அறிய விஞ்ஞானிகளின் உதவி தேவை இல்லை. 32:27. அவர்கள் கவனிக்கவில்லையா - நிச்சயமாக நாமே வரண்ட பூமியின் பக்கம் மேகங்கள் மூலமாக தண்ணீரை ஓட்டிச் சென்று.... இச்செயலைச் செய்பவன் இறைவன் என்பதை அவனே கூறுகின்றான். மறுப்பாருண்டா? 45:5.... வானத்திலிருந்து அருள் மாரியை அல்லாஹ் இறக்கி வைத்து, இறந்து போன பூமியை அதைக் கொண்டு உயிர்ப்பிப்பதிலும்; காற்றுக்களை மாறி மாறி வீசச்செய்வதிலும் அறிவுடைய சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன.' ''27:63...மேலும், தன்னுடைய 'ரஹ்மத்' என்னும் அருள் மாரிக்கு முன்னே நன்மாராயம் ஆக காற்றுகளை அனுப்பி வைப்பவன் யார்? 

மனித மூளை ஓரே சமயத்தில் பல விடயங்களைச் செயற்படுத்தும் தன்மை கொண்டது. மூளையே நாம் அனைத்துப் பொருட்களையும் வர்ணங் களையும் அப்படியே எடுப்பதுடன், நம்மைச் சுற்றியுள்ள உஷ்ணம், ஒலி, நிலத்தில் நமது காலின் அழுத்தம், வாயில் ஏற்படும் வரட்சி,  நாம் பாவிக்கும் இவ்விசைப் பலகையின் கட்டமைப்பு போன்றவற்றையும் அறிந்து கொள்கிறது. மேலும், நமது மூளையானது உணர்வுகள், சிந்தனைகள், நினைவுகள் போன்றவற்றைத் தன்னகத்தே தக்க வைத்து அடுத்தடுத்த நடவடிக்கைகளை உருவாக்குகிறது. அது 15000 ட்ரில்லியன் தகவல்களை தன்னகத்தே சேமித்து வைத்துக் கொள்ளுகிறது.  இதே வேளை நமதுடலின் அனைத்துச் செயற்பாடுகளையும், சுவாசிக்கும் முறை, கண் இமைகளின் அசைவு, பசி, கைளின் தசைகளின் இயக்கம் போன்றவற்றையும், தனது செயற்பாட்டில் வைத்துக்கொள்கிறது. மனித மூளை ஒரு வினாடியில் பத்து இலட்சம் தகவல்களை ஒழுங்கமைக்கும் ஆற்றல் பொருந்தியது. நமது மூளை தனக்குக் கிடைக்கும் தகவல்கள் அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து, அவற்றில் முக்கியமற்றவற்;றை  வடிகட்டிவிடுகிறது.  இந்த வடிகட்டும் முறையே நாம் எமது வேலைகளில் மனத்தைக் குவித்து சீராகவும், திறமையாகவும் செயற்பட உதவுகிறது. மற்றைய உடல் உறுப்புக்களைப் போன்றல்லாது முற்றிலும் வித்தியாசமான தொழிற்பாட்டைக் கொண்டது மூளை. 

16:78 . உங்கள் மாதாக்களின் வயிறுகளிலிருந்து நீங்கள் ஒன்றுமே அறியாதவர்களாக இருந்த நிலையில் உங்களை அல்லாஹ் வெளிப் படுத்துகிறான்; அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வை களையும், இதயங்களையும் - நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு -  அவனே அமைத்தான். அங்கே நுண்ணறிவு உண்டு, அதில் காரண காரியங்களைச் சீர்தூக்கிப் பார்க்கும் திறன் உளது, உணர்வுகளை உண்டாக்கும் தன்மை உள்ளது, கனவு காணல், திட்டமிடல், நடவடிக்கை எடுத்தல், பிறரோடு தொடர்புபடல் போன்ற தன்மைகளுமுண்டு. மனித உற்பத்தி X, Y எனும் இருபத்தி மூன்று (23) சோடி குறோமோசம்களால் உருவாகின்றது. 36:36. பூமி முளைப்பிக்கின்ற எல்லாவற்றையும்,  இவர்களையும்,  இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன். மனித உற்பத்தியின் படிநிலையை மிகத் துல்லியமாக பட்டியல் போட்டுக் காண்பிக்கின்றது குர்ஆன் என nடீhறிஸ் மைக்கேல் என்பார் கூறும் கூற்றை விஞ்ஞானிகளும் ஏகமனதாக ஏற்றுள்ளனர். 22:5. மனிதர்களே! மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந்தீர் களானால், நாம் நிச்சயமாக உங்களை மண்ணில் இருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும்.......

கண்.... எழுபது இலட்சம் வர்ணங்களை வகைப்படுத்தும் தன்மை கொண்டதெனவும், அது தன்னிச்சையாக ஓரே சமயத்தில் பதினைந்து இலட்சம் தகவல்களை வியத்தகு முறையில் கண்டும்; கையாண்டு கொள்ளும் தன்மை கொண்டதெனவும் அறியப்பட்டுள்ளது. உயிர்வாழும் ஒன்றின் பரிணாம மாற்றங்களைக் உன்னிப்பாகக் கவனிக்கக் கூடியது. 16:78 அன்றியும் உங்களுக்குச் செவிப்புலனையும், பார்வைகளையும், இதயங்களையும் - நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு -  அவனே அமைத்தான். கண்ணின் அமைப்பு, அது சிறிதைப் பெரிதாகவும், பெரிதைச் சிறிதாகவும், அசைவதை நிற்பது போலவும், நிற்பதை அசைவது போலவும், தூரத்தில் இருப்பதை கிட்ட இருப்பது போவும், கிட்ட இருப்பதை தூரத்தில் இருப்பது போலவும் காட்டும் தன்மையுடன் அமைந்திருப்பதன் மூலம் நாம் எதனையும் கண்டு கொள்ள உதவுகிறது. உதாரணம்- சூரியன், அதன் பருமன், அமைந்துள்ள தூரம், அதன் அசைவு எதுவும் நமக்கு அப்படியே தெரிவ தில்லை. கண்ணின் அமைப்பே நம்மால் அதனைக் காண உதவுகிறது. மேலும், நாம் காணும் காட்சிகள் சில வினாடிகள் கண்ணினுள்ளே அகப் படுத்தப்படும் தன்மையைக் கொண்டிருப்பதால் ஓர் நிகழ்வை தொடர்பாகக் காணமுடிகிறது. அன்றேல் துண்டு துண்டாகவே தெரியும். இருப்பினும் உயிருள்ள, உயிரற்றவற்றின் பரிணாமங்களை மட்டும் ஆரம்ப நிலையில் முழுமையாகக் கண்ணாலோ, மூளையாலோ விவரிக்க முடியாமலிருக்கும். கண் அமைந்துள்ள இடம், அதன் பாதுகாப்புக் கருதி அமைக்கப்பட்டுள்ள இமை, அதன் இயக்கத்துக்கும், விழியின் சுழற்சிக்கும், தூய்மைக்கும், பாதுகாப்புக்கும்  ஏதுவாக சுரக்கப்படும் கண்ணீர், சுருங்கி விரியும் தன்மை இப்படி எத்தனையோ!

இப்பேரண்டத்தின் தொடக்கத்திற்குக் காரணமானது? தற்போது டீபை டீயபெ எனப்படும்; பெருவெடிப்பால் உண்டான சக்தியிலும்; ஒளியிலும் நமது பேரண்டம் உருவானதாக விஞ்ஞானிகள் கருத்துக் கொண்டுள்ளனர். இன்று இருக்கின்ற அனைத்துக்கும் இந்த பெருவெடிப்பே காரணமாகும். பேரண்டத்தின் ஆரம்பம், விண்வெளியின் (ளுpயஉந) தொடக்கம்,  ஆரம்ப  நேரத்தின் (வiஅந) தொடக்கம் போன்றவை. இப்பெருவெடிப்புக்கு முன்னர் நேரம் என்ற ஒன்றே இல்லாதிருந்தது. ஆனாலும் நேரம் இறைவனிடம் இருந்துள்ளமையை குர்ஆன் வசனங்கள் கோடிட்டுக் காட்டுகின்றன. 25:59. அவனே வானங்களையும், பூமியையும், அவற்றிற்கு இடையில் உள்ளவற் றையும் ஆறு நாட்களில் படைத்தான்;.  இப்ரேண்டம் விரிவடைந்துகொண்டு போவதாகக் கண்டறியப்பட்;டுள்ளது. அதையே குர்ஆன் 51:47. மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்.

ஆரம்பத்தில் எதுவும் இல்லாமல் இருந்ததென்ற கொள்கையை உடைய வான்பௌதிகவியலாளர் றொபர்ட் ஜெஸ்ட்ரோ என்பார், அனைத்துக்கும் காரணமாக நடைபெற்ற பெருவெடிப்பு ஒன்றின் மூலமே இப்பேரண்டத்தில் முதல் தடவையாக ஒவ்வோர் நட்சத்திரமும் ஒவ்வோர் கிரகமும், ஒவ்வோர் உயிரினமும் தோன்றவும் ஓர் அசைவும், இயக்கமும் ஏற்படவும் செய்தது எனக் கூறுகிறார். ஆனாலும் அந்த பெருவெடிப்பு எப்படி உண்டானது என்பதற்கான காரணத்தைக் கண்டறிய முடியாதுள்ளது.  2:117. வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி தானே உண்டாக்கினான்;. 

பௌதிகத்தில் நோபல் பரிசு பெற்றவரான ஸ்டீவன் வெய்ன்பேர்க்  என்பார், அந்த வெடிப்பு நடைபெற்ற ஷணத்திலேயே பல நூறாயிரம் பாகை வெப்பத்துடன் கூடிய ஒளி இப்பேரண்டத்தை நிறைத்தாகக் கூறுகிறார். இப்பேரண்டம் முன்பு இருக்கவில்லை. அது என்றோ தொடங்கியதே.... அதன் தொடக்கத்துக்குக் காரணமானது எது? 30:27. அவனே படைப்பைத் துவங்குகின்றான் இந்த பெருவெடிப்பும் ஒளியும் சடப் பொருளுக்குமான காரணத்தை விளக்குவதற்கு விஞ்ஞானிகளால் முடியவில்லை. அவர் களிடம் அப்படி விளக்குவதற்கான தகவல்கள் எதுவுமில்லை.

பேரண்டம் குறிப்பிட்ட இயற்கைக் கோட்பாட்டுடன் சீராக இயங்குவது எப்படி? வாழ்க்கை நிலையற்றது. ஆனாலும் அறிந்து கொண்டே தினமும் நாட்களை எண்ணிக் கொண்டுள்ளோம். சுடச்சுட வைக்கப்பட்ட ஒரு கோப்பைத் தேநீர் சிறிது நேரத்தில் குளிர்ந்துவிடும் அதே வேளை, புவியின் ஈர்ப்பு எவ்வித  மாற்றமுமற்று அப்படியே உள்ளது. பூமி அதே 24 மணிநேர அளவில் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இருக்கிறது. ஒளியின் வேகம் பூமியிலும் சேய்மையிலுள்ள அண்டத்திலும்,  அன்றுபோல் இன்றும் உள்ளது. இது எப்படி? இயற்கைச் சட்டங்கள் ஒரு போதும் மாறுவதில்லை. ஏன் அவை ஓர் ஒழுங்கிலும், நம்பகமாகவும் இயங்குகின்றன? குர்ஆன் 36:40. சூரியன் சந்திரனை  பிடிக்க முடியாது. இரவு பகலை முந்தமுடியாது. இவ்வாறே எல்லாம் (தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன.

இந்த இடத்தில் புகழ்பெற்ற விஞ்ஞானிகள் தடுமாறுகின்றனர். என்ன புதுமை என வியக்கின்றனர்! இப்பேரண்டம் சட்டதிட்டங்களுக்கமைவாக இயங்க எவ்விதத் தர்க்கமும் தேவை இல்லை. அது தானாகவே ஒரு கணித சட்டத்துக்கேற்கு பணிந்து இயங்குகிறது. 72:28 அவன் சகல பொருட்களையும் எண்ணிக்கையால் மட்டுப்படுத்தி இருக்கிறான். 10:31 காரியங்களையும் திட்டமிட்டுச் செயல்படுத்துபவன் யார்?

பேரண்டம் இவ்வண்ணம் பணிந்து நடக்கத் தேவையில்லை என்பதை விளங்கிக் கொள்ளும் போது வியப்பு மேலிடுகின்றது. ஒவ்வோர் ஷணமும் இப்பேரண்டத்தின் நிலை யாரும் எதிர்வு கூற முடியா வண்ணம் மாற்றமடைந்து கொண்டிருக்கின்றது. இன்னும் பேரண்டத்தில் புதிது புதிதாக ஏதேதோ தோன்றிய வண்ணம் உள்ளது. குர்ஆன் 13:2. அல்லாஹ் எத்தகையவனென்றால் அவன் வானங்களைத் தூணின்றியே உயர்த்தி யுள்ளான்; நீங்கள் அவற்றைப் பார்க்கிறீர்கள்; பின்னர் அவன் அர்ஷின்மீது அமைந்தான்; இன்னும் அவனே சூரியனையும் சந்திரனையும் (தன்) அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான்; அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே நடந்து வருகின்றன் அவனே  காரியத்தையும் நிர்வகிக் கின்றான். குவான்டம் இலக்ட்ரோ டைனமிக்ஸ் உக்கான நோபல் பரிசு பெற்றவரான றிச்சர்ட் பெய்ன்மென், இவ் இயற்கை ஓர் கணித ஒழுங்கில் இருப்பதில், ஏதோ சூட்சுமம் இருப்பதாகவும், அனைத்து அற்புதங்களும் நமக்கு ஆச்சரியம் தருபவையாக இருப்பினும் அவை அனைத்தும் ஓர் நெறிக்கு உட்பட்டே நடைபெறுகின்றன என்பதே உண்மை எனவும்  கூறுகிறார். குர்ஆன் 39:5 இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணைப் பிரகாரம் நடக்கின்றது . அறிந்து கொள்வீராக!

25:54. இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான். கலன்கள் செயல் திட்டப்படியே இயங்குகின்றன என  னுNயு குறியீடு தகவல் தருகிறது. ஓர் குறிக்கோள் உடனேயே அனைத்து அறிவுறுத்தல்களும், கற்பித்தல்களும், பயிற்சிகளும் வருகின்றன. யாரோ ஒருவர் எழுதியுள்ள  ஓர்  அறிவுறுத்தற்கையேடு குறிக்கோளோடு கூடியது. நமது உடலில் காணப்படும் ஒவ்வோர் கலனும் ஒரு சிறு கணனியைப் போன்ற  மிக விரிவான அறிவுறுத்தல் நெறியைக் கொண்டுள்ளது. 57:22. பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை, நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதான தேயாகும். கணனி செயல் திட்டம் இவ்வாறான 110010101011000 ஒன்றுகளாலும்  பூஜ்யங்களாலும் என ஆக்கப்பட்டுள்ளது என்பதை நாமறிவோம். இந்த வழியில் ஒழுங்குபடுத்திக் கூறப்பட்டுள்ள செயல் திட்டம் Pசழபசயஅஅந கணனி என்ன செய்ய வேண்டுமெனக் கூறுகிறது. 

இது போன்றதே நமது உடற் கலன்களின் னுNயு குறியீடும். நான்கு இரசாயனங்களின் குறுக்கங்களான யுஇவுஇபுஇஊ  என்ற எழுத்துக்களைக் கொண்டு இவ்விதம் ஊபுவுபுவுபுயுஊவுஊபுஊவுஊஊவுபுயுவு  ஆக்கப்பட்டு உள்ளதாகக் கூறுகின்றனர். ஒவ்வோர் மனித கலனிலும் 300கோடி எழுத்துக்கள் இருப்பதாக அறிவியல் கூறுகின்றது!!! இந்த நுட்பம்  நமது தொலை பேசியில், குறிப்பிட்ட காரணங்களுக்காக பீப் சத்தத்தை உருவாக்குவதற்காக ஆக்கப்பட்டுள்ள செயல் திட்டத்தைப் போன்றதே னுNயு அறிவுறுத்தலும்.  முந்நூறு கோடி எழுத்துக்களால் ஆக்கப்பட்டுள்ள னுNயு Pசழபசயஅஅந  செயல் திட்டம் கலன் எப்படி நடக்க வேண்டும் என்பதைக் கூறுகிறது. இது ஓர் முழு அளவிலான அறிவுறுத்துல் கையேடே. 22:5 மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்பு உங்களை குழந்தையாக வெளிப்படுத்துகிறோம்.

அந்த தகவல் திட்டம் எப்படி ஒவ்வொரு கலனிலும் முடிவுறுகின்றது என்பதே இங்கு எழவேண்டிய  கேள்வியாகும். 76: 1. திட்டமாக மனிதன் மீது காலத்தில் ஒரு நேரம் வந்து, அதில் அவன் இன்ன பொருள் என்று குறிப்பிட்டுக் கூறுவதற்கில்லாத நிலையில் இருக்கவில்லையா? இவைகள் வெறும் இரசாயனங்கள் அல்ல இந்த இரசாயனங்கள், எவ்வாறு மனித உடலில் கலன்கள் உருவெடுக்க வேண்டும் என்பதை எப்படி மிக விரிவாக அறிவுறுத்துகின்றன என்பதுவே, நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. இயற்கை, உயிரியல் போன்ற ஒரு தகவலை திட்டமாக எழுதும்போது முழுமையான விளக்கக் குறைவையே கொண்டிருக்கும். இதுபற்றிக் கூறப்படும் தகவல் போன்றதில், யாரோ ஒருவரது நோக்கோடு கூடிய அமைப்பு ஒன்றின்றி அறிவுறுத்தலை அறிய முடியாது. 30:8. அவர்கள் தங்களுக்குள்ளே சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? அல்லாஹ் வானங்களையும், பூமியையும், இவ்விரண்டிற்குமிடையில் உள்ளவற்றை யும், உண்மையையும், குறிப்பட்ட தவணையையும் கொண்டல்லாமல் படைக்கவில்லை.

விண்ணிலும் மண்ணிலும் புதையுண்டு கிடக்கும் அனைத்து வியத்தகு அற்புதங்களை, உண்மைகளை இன்றைய விஞ்ஞான ஆய்வுகள் வெளிப் படுத்திக் கொண்டிருக்கின்றன. ஆனாலும், இந்த உண்மைகளைக் கண்டு விஞ்ஞானிகள் வியப்படைவதற்கு மாறாக,  இறைவனின் இருப்பை ஏற்றுக் கொள்கின்றனர். காரணம், தமது நீண்ட கால ஆய்வில் கண்டறிந்தவை என்றோ எங்கோ கூறப்பட்டுள்ளமையே. அத்தோடு,  தாம் என்றுமே கண்டு கொள்ள முடியாது எனத் தீர்க்கமாக அறிந்த எத்தனையோ கேள்விகளுக்கான விடை,  இறைவனால் அகில உலக மாந்தருக்கும் அருட்கொடையாக 1400 வருடங்களுக்கு முன்னர் பாலைவனத்தில் பிறந்த, எழுத்தறிவற்ற ஓர் அநாதை மூலம் இறக்கியருளப்பட்ட அவனது இறுதியும், அறுதியுமான மாமறையாம் புனித குர்ஆனில் பல இடங்களில் அநாயாசமாகக் கூறிச் சென்றுள்ளமையைக் காணக் கூடியதாயுள்ளதே. 

27:75. வானத்திலும், பூமியிலும் மறைந்துள்ளவற்றில் நின்றும் எதுவும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) தெளிவான குறிப்பேட்டில் பதிவு செய்யப் படாமல் இல்லை.   விஞ்ஞான வளர்ச்சியின் அதியுன்னத காலமான 20, 21ஆம் நூற்றாண்டுகளிலே கண்டு கொள்ள முடியாதுள்ள அனைத்து வினாக்களுக்கும் விடையை,  விஞ்ஞானமே குழந்தையாகப் பரிணமிக்காத காலமான கிபி ஆறாம் நூற்றாண்டில்- 14நூற்றாண்டுகளுக்கு முன்- இறை மறை கூறிச் சென்று உள்ளமை இறைவனின் இருப்பை மிகத் உறுதிப்படுத்தி இருப்பதாக சாட்சி பகர்கின்றனர். 3:18.அல்லாஹ் நீதியை நிலைநாட்டக் கூடியவனாக உள்ள நிலையில் அவனைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று சாட்சி கூறுகிறான். மேலும் மலக்குகளும் அறிவுடையோரும் அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை அவன் மிகைத்தவன், ஞானமிக்கவன். ஆம் இன்று விஞ்ஞானிகள் தமது அறிவியல் நிரூபணங்கள் மூலமாகத் தாங்களே சாட்சி கூறுகின்றனர்.

12.05.2010                                                                                                    - நிஹா -

யார் எதிர்த்தாலும் எனது செயற்பாடுகளை விட மாட்டேன்


Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

யார் எதிர்த்தாலும் எனது செயற்பாடுகளை விட மாட்டேன்


புத்த மதகுரு என்ற வகையில் கொடுக்கப்படும் ஒரு கௌரவத்தை வைத்துக் கொண்டு, ஒருவர் காட்டுத் தர்பார் நடத்தி வருகிறார். அதனை அனைவரும் கைகட்டி வாய்பொத்திப் பார்த்துக் கொண்டிருக்கினறனர்.  

அவர் எதனையும் எதிர்க்கலாம், தகர்க்கலாம், யாரையும் கீழ்த்தரமாக மேடைகளில் நின்று விமர்சிக்கலாம:  தானே பொலிஸ் என்று யாரையும் பிடிக்கலாம், இந்த நாட்டின் யாப்பை மீறலாம், அது செல்லாதது எனக் கூறலாம் என்ற வகையில் நடப்பதற்கு யார் அவருக்கு அனுமதி கொடுத்தவர்? 

இந்நிலை உலகில் எங்கும் நடவாதது. நடக்கவும் கூடாதது. பெரும்பான்மைப் புத்தர்களுக்கும், நாட்டுக்கும் கூட சர்வ தேச ரீதியில் பெரும் அபகீர்த்தியையும், அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி வருகிறார்.அனைத்து மக்களுக்கும் துன்பத்தையும், நிம்மதியின்மையையும், இனங்களுக் கிடையில் சந்தேகத்தையும், முறுகல்களையும், குழப்பங்களையும உருவாக்கி மீண்டும் இந்த நாட்டில் இரத்த ஆறை ஓட வைக்கவே முயல்கிறார்.  

இந்நிலையைத் தொடரவிடுவது நாட்டுக்கு நன்மை பயப்பதல்ல.  உடனடியாகத் தடுத்து நிறுத்தா விட்டால், பினனர் அனைவரும் கைசேதப்பட வேண்டிவரும். காலங் கடந்து விட்டால் வைத்தியமும் பலனளிக்காது.

Monday, June 17, 2013

பெண்ணியம் புன்னியமல்ல, உயர் கண்ணியம், பெரும் புண்ணியம்.

பெண்ணியம் புன்னியமல்ல,  பெரும் புண்ணியம்,                      உயர் கண்ணியம்.


ஆசியாவில் குறிப்பாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளிலேயே அதிக அளவில் பெண்ணியம் பற்றிப் பேசப்படு கின்றது. பெண்ணியம் பற்றிப் பேசுவதே பெருமை சேர்ப்பதாக வும், உயர் பண்பாகவும், தாராளத் தன்மையைக் காட்டுவதாகவும், கலாசார மேன்மை யைக் குறிப்ப தாகவும், கௌரவமாகவும், பெண்களுக்குக் கொடுக்கப்படும் மதிப்பாகவும், மரியாதையாகவும் போன்ற வகையில் சிந்திக்கப் படுகின்றன. எழுதப்படுகின்றன. பேசப்படுகின்றன.  போராட்டங்கள், கோஷங்கள் என வளர்ந்து கொண்டே போகின்றன. பெண்ணியம் பற்றிப் பேச விழைபவர்கள் பெண்ணியத்திற்கான வரைவிலக்கணம், வரம்பு, பண்பு போன்றவற்றை அறியாதவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில், அவர்களது அனைத்துச் செயற்பாடுகளும் எதிர்த் திசையை நோக்கிச் சென்று கொண்டிருக் கின்றன.

பெண்கள் அக்காலத்தில் வெறும் போகப் பொருளாக, பிள்ளை பெறும் இயந் திரங்களாக பார்க்கப்பட்டு, பாவிக்கப்பட்டு வந்துள்ளமையைச் சரித்திரங்கள், அவை உண்மையோ பொய்யோ, கூறிக் கொண்டிருக்கின்றன. தசரதச் சக்கர வர்த்தி அறுபதாயிரம் பெண்டிரைத் தம் மனையாட்டிகளாகக் கொண்டிருந்த தையும்,  பாஞ்சாலியான திரௌபதை ஐவரைக் கணவராகக் கொண்டிருந்த தையும்,  தர்மர் அனைத்து சொத்துக்களையும் சூதில் இழந்த பின்னர்,  தம்பி மாரைப்  பணயம் வைத்திடாமல், திரௌபதியைப் பந்தயம் வைத்துச் சூதாடித் தோற்றதையும், துரியோதனன் சபையில் தம்பி துச்சாதனனால் துகிலுரியப் பட்ட கேவலங்களையும், கணவர் இழந்ததும் மனைவியை உடன் கட்டை ஏற வைத்து உயிரோடு  எரித்த கொடுமையையும், கும்பகர்ணனால் 'திட்டி யில் விடமன்ன கற்பின் செல்வி...' எனப் புகழப்பட்ட  சீதையை,இராமர் தனது மனையாளாகவிருந்தும,; அவளது கற்பில் நம்பிக்கை வையாது, அவள் கற்பின் களங்கத்தைப் போக்க தீயிற் குதிக்க வைத்திருந்த அதர்மத்தையும், காதலித்தால் என்ற ஓரே காரணத்திற்காக மூக்கறுக்கப்பட்ட சூர்ப்பனகையை யும், தேவலோக அதிபதி இந்திரனின் சூழ்ச்சிக்கு இரையாக்கப்பட்டு களங்க முற்றிருந்த தன் மனைவி அகலியைக் கல்லாகச் சாபமிட்ட பரிதாபங்களும்,  கோயில்களில் வேதியர்களின் காம இச்சையைத் தணிப்பதற்காகவே பெண் குமர்கள், பட்டயம் கட்டப் பட்டு, தேவதாசிகளெனப் பெயரிடப்பட்டு அவர்தம் காமவேகத்தைத் தணித்து வந்தமையும், தகப்பனின் மனைவியர் பலரை ஓரே சமயத்தில், வரிசையாக வைத்து, பலகனியில் பாலியல் இன்பம் நுகர்ந் ததையும், தேவர்களே பெண்களை,- பிறர் மனைவிகளைக் கெடுத்ததையும்-, வானோரே மனித உருவி லான பெண்களில் கண் வைத்துக் காதல் கொண்ட தையும், கல்யாணம்கூட முடித்த கதைகளும் நாம் காவியங்களாகப் போற்றி மகிழ்வனவற்றில் காணப்படுபவையே. காம இச்சைகளைக் களைவதைக் களவியல் என்ற இலக்கணத்துள் வைத்துக் காவியங்கள் படைத்ததும் ஓர் வகையில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியே.

கணவன் இறந்துவிட்டால் மனைவி அமங்கலமாகக் கருதப்பட்டதையும், பெண்களுக்கு ஏற்படும் மாத விலக்கை தீண்டத் தகாததாகக் கருதி, அந்நாட்களில் அப்பெண் வீட்டுக்கு வெளியே வாழ வேண்டி நிர்ப்பந்திக்கப் பட்டு இருந்ததையும், மாதவிலக்குக்கு என்ற அந்த இயற்கை உபாதைக்குக் கூட வீட்டுக்குத் தூரம் எனப் பெயர்  வழங்கி, விலக்கி,  வேதனை செய்ததை யும், சீதனக் கொடுமையால் கன்னிகளாக வாழ்ந்து மடிய வைத்த சோகங் களையும், சீதனம் தரவில்லை, அல்லது மேலும் கொண்டு வரவில்லை என்றெல்லாம் குற்றங்கள் சுமத்தி, கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட செய்திகளும்,  பெண்கள் பிறப்பதே அபசகுனம் எனக் கருதும் நிலையும்,அப்படிப் பிறந்து விட்டால் அதனை உயிரோடே புதைத்து உவகை கொண்டாடியதையும்,  நம் மத்தியில், வரலாறாகவும், வாய்வழியாகவும்,  பதிவுக ளாகவும்,  சமயக் கருத்துக்களாகவும், சமயக் கடப்பாடுகளாகவும் கட்டுப்பாடு களாகவும், மரபுகளாகவும், கலாசாரங்களாகவும் கருதப்பட்டு தடையற்று நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன.

 இவைகளில் அனேக மானவை வழக்கொழிந்துவிடினும் ஒரு சில குறிப்பாக,  சீதனக் கொடுமை, பெண்கள் பிறப்பதே அபசகுனம் எனக் கருவிலே அழிப்ப தும் இன்னும் அழியா வரம் பெற்றவை போல் நம்மிடையே வழி வழியாய்  நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அவலங்கள் என்பது கவலைக்குரியதும் கண்டனத்துக்கும் தண்டனைக்கும் உரியனவுமே. இவைகளைப் பெண் கொடுமை, பெண் அநீதி, பெண்வதை போன்ற வற்றுள் அடக்கிவிடலாம்.

இன்றுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சீதனக் கொடுமைகளும், பெண் குழந்தை பிறப்பதே அபசகுனம் எனக் கருவிலே உயிரைக் கவர்வதும் பெண் களாலேயே கிரமமாகவே நடத்தி முடிக்கப்படும் அக்கிரமங்களே. மாமன் மருமகள் கொடுமை நடந்துள்ளதாக இதுவரை வரலாற்றுப் பதிவுகள் இல்லை யென்றே நினைக்கிறேன். அனைத்துப் பெண் கொடுமைகளும் மாமி மார்களாலேயே மேடையேற்றப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது உலக றிந்த இரகசியம். 

மேலும் பெண்களை வைத்து நடத்தப்படும் உடல் இச்சை யைத் தீர்க்கும்  விடுதிகளும், கச்சை அவிழ்ப்பு நடனக் கச்சேரிகளும்,  புதிய மோஸ்தர் விழாக்களும், ஆடைக் குறைப்புகளும், அம்மணங்களும் கூடப் பெருமளவில் பெண்களால், பெண்களின் பூரண சம்மதத்துடன் நடத்தப்படுகின்றன.  அரை குறை ஆடை களுடன்,  தம் அங்கங்களைக் காட்டித் தாமாகவே தம்மை விலை பேசும் காட்சி பட்டினத்து வீதிகளில் அன்றாடம்  பெண்கள் நடத்தும் அவல நிகழ்வு. இவைகளைப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகக் குற்றம் சுமத்த முடியாது. ஆண்களில் ஒருவர்கூட இதனையொத்த இழிசெயல் செய்வதாக அவதானிக்கப் படவில்லை. 

இப்படி நான் எழுதுவதால், அவ்வப்போது பெண்கள் மேல் வல்லுறவுகள் நடைபெறுவதும், அவர்கள் பல்வேறு வழிகளில், சில மூன்றாந்தர ஆண் களால் இம்சைக்குள்ளாக்கப்படுவதும் நடைபெறுவதில்லை என்பதல்ல. இவையும் இந்நாட்களில் சாதாரணமாகக் காணக்கூடிய காட்சிகளாகவே உள்ளன. இம்மாதிரி யான குற்றச் செயல்கள்கூட நடைபெற பெருமளவு வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பது பெண்களின் நடத்தைகளும், அவர்தம் ஆடை அணியும் முறைகளென்பதும் அறியப்பட்டுள்ளது. 

அதிகமாக பெண்கள் இம்சைக்குள்ளாக்கப்படுவது போன்ற முறைப்பாடுகள் முஸ்லிமல்லாதோரிட மிருந்து மட்டுமே வருவது என்பது, ஆடையால் ஏற்படுத்தப்பட்ட அவலமே என்பதைத்  தெளிவுபடுத்து கிறது. வல்லுறவு, சிறுமிகள் துஷ்பிரயோகம் போன்றவை எல்லாம்கூட முஸ்லிம் அல்லா தோர் மத்தியிலே நடப்பதற்குக் காரணம், அச்சமூகங்களின் வாழ்க்கை முறையிலுள்ள சீர்கேடே என்பது சொல்லாமல் தெரிவது. பெண்ணியம் பேசுவோர் மேற்கண்ட காரணங்களைக் கூறுவாராயின், அது பெண்ணியம் என்ற வார்த்தைக்கான வரைவிலக்கணத்துள் அடங்காது. மேலும்,  இக்குற் றங்களில் மிகச் சிலவற்றுக்கு மட்டுமே ஆண்கள் பொறுப்பாகின்றனர்.   

மேலும், பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்களெனக் கூறி, தமக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் எனக் கேட்பது எவ்வகையிலும் நியாயப் படுத்த முடியாததும் நடைமுறைச் சாத்தியமற்றதும்.  அது இயற்கை அமைப் புக்கு மாறானதும், பெண்களுக்கே துன்பத்தை வருவிப்பதும், நீண்ட காலப் போக்கில் அவர்களுக்குள்ள பாதுகாப்பு, மதிப்பு, மரியாதை, அந்தஸ்து, கௌரவம் அனைத்தையும் இழக்க வைப்ப தோடு, பெண்ணினத்திற்கு அழிவை நோக்கிய பயணமாகவும் அமைந்துவிடும்.  மட்டுமல்ல, மேலும் அது பெண்ணியம் என்ற கோட்பாட்டுள் சிறிதேனும் அமையாது, எதிர் மாறான போக்கையே கொண்டி ருக்கும். பெண்ணியம் என்ற அவர்தம் கருதுகோள்  பெண்களில் வேறு ஏதோ ஓர் வகை தீய, கீழ்த்தர, துன்பந் தரும் பழக்கவழக்கங்களை, ஒழுக்கங்களை உண்டாக்கிவிடும். அத்தோடு, இயற் கைத் தன்மைக்கு மாறான, பெண்கள் படைக்கப்பட்ட நோக்கத்துக்கே வேறுபட்டதாகவும் அமையும், இன்னும், ஆறாவ தறிவு வழங்கப்படாத மிருகங்களின் வாழ்க்கை முறையை ஒத்த தன்மையை வெளிப்படுத்து வதான நிலையையே கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.

அனைத்தும் அவைகளுக்குரிய ஒழுங்கு முறைகளிலும், ஒழுக்க மேம்பாட் டையும் கொண்டிருக்கும். பசுமாட்டின் இயல்பை காளைமாட்டில் எதிர் பார்க்க முடியாது. அதுபோன்றே காளை மாட்டின் இயல்பும். பசு செய்யும் வேலையைக் காளை செய்வதில்லை. மனிதர் செய்விக்க முயல்வது மில்லை. கூட்டு வாழ்வை பசுக்கள் மட்டுமே செய்ய முடியும். காளைகளுக்கு உறவு முறை தெரிந்திருப்பதில்லை. அவை தமது எல்லையைத் தாண்ட என்றும் விழைவதுமில்லை. பெண் மயில் தோகை விரித்து ஆடவேண்டும் என யாராவது நினைப்பதுண்டா? ஆண் பறவைகள் தம் குஞ்சுகளுக்கு உணவூட்டுவதையோ, பறப்ப தற்குப் பழக்குவதையோ கண்டிருக்க முடியாது.   

பெண்ணியம் என்பது பெண்ணின் இயல்பான, இயற்கை வழங்கியுள்ள தன்மைகளை, பண்புகளை, நடத் தைகளை, மென்மைகளை, சாந்தப் போக்கை, தாய்மையை, கருணையை, அன்பை, அரவணைப்பை, ஆதரிப்பை, கூடிவாழும் உறவு முறைகளை ஏற்படுத்தும் அமைப்பை உள்ளடக்கிய சிறந்த கலவை யாகவே இருக்க வேண்டும். ஒரு பொருளுக் கோ,  படைப்புக்கோ அவற்றுக்கென இயற்கையான தனித் துவம் கொண்ட பண்புகள் இருக்கும். அவையே அவற்றின் குணாதிசயம்.அக்குணாதிசயங்கள் அவற்றின் ஒழுங்கு முறைகளாக இருக்கும். பெண்ணியம் பேசுவோர் எதிர் பார்ப்பது போல்  மாறும் நிலைகள் ஏற்படு மாயின், அது இயற்கைத் தன்மை யை, இயல்பான போக்கை, அவற்றின் சீர்மையைக் குலைத்து, அதனால் பெறப்பட வேண்டிய விளைவை ஊறுபடுத்தி குழப்ப நிலையைத் தோற்று வித்துவிடும். 
  
பெண்களின் உடல், உள அமைப்பு முற்றாக ஆண்களில் நின்றும் வேறு பட்டது. அவர்கள் மென்மைத் தன்மையைக் கொண்டிருப்பது வீணான ஒன்றல்ல. அவர்களின் உடல் வளர்ச்சிப் போக்கும் நெகிழும் தன்மையும் கூட உயரிய காரணங்களுடன் கூடியதே. அவர்கள் அணுவையும் விடச் சிறிய திரவத்தை ஏற்று, அதனை மனித உருக்கொண்ட பெரிய அளவிலான படைப்பாக வெளியேற்ற வேண்டியவர்கள். அத்தோடு முடிந்து விடுவ தில்லை  அவர்கள் கடமை. அக்குழவிக்குப் பால் புகட்ட வேண்டியும், வளர்த்து வாலிபனாக, நற்பிரஜையாக  ஆக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது. 

அவர்களது பாலையே இறைவன், உணவாகவும், ஒளடதமாகவும் ஆக்கி வைத்துள்ளமையை பெண்கள் உணர வேண்டும். இங்கிருந்தே உணவு தயாரிக்கும் அவர்களது கடமை தொடக்கி வைக்கப்படுகிறது. குடும்பப் பராமரிப்பு, வாழும் இடத்தைத் தன் பொறுப்பில் வைத்துக் கொள்வது, அதன் தூய்மை காப்பது, பாதுகாப்பைத் தருவது,  சமூகத்தில் அதன் கௌரவத்தைப் பேணுவது, குடும்ப நிர்வாகத்தை நடத்துவது போன்ற எண்ணற்ற பொறுப்புக் கள் இயல்பாகவே சுமத்தப்பட்டவள்தான் பெண். அதனாலேயே அவர்க ளைச் சுமைதாங்கி எனவும்,பொறுமையின் சிகரம் எனவும்,பெருமைக்குரியவள் எனவும் கூறப்படுகிறது. 

மேற்கண்ட காரணங்களால், அப்பெண்,  தன் உடலை,  உள்ளுறுப்புக்களைத் தாக்கங்கங்களுக்கு உள்ளா காதவாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற் கேற்றவாறு தன் வாழ்வை அமைத்துக் கொள்ளல் வேண்டும். ஆண்களைப் போல் திரியும் நிலையை விரும்பக் கூடாது.  

மனிதப் படைப்புகளில் மட்டுமே பெண்கள் அழகைக்  கொண்டுள்ளனர். இதுவும் கவர்ச்சியை ஏற்படுத்து வதற்காகவே தரப்பட்ட இறை அருள் என்பதை மறந்து, அதைச் சந்தைப் படுத்தாது பார்த்துக் கொள்ளல் வேண்டும். அக்கவர்ச்சி கொடுக்கப்பட்ட நோக்கம் உயர்வானது. அதாவது ஆணைக் கவர்வதன் மூலம், பாலியல் தொடர்பைத் தூண்டி, படைக்கும் தொழிலில்  ஈடுபடுத்துவது. இது இறை செயலை ஒத்தது. அத்தனை மேன்மை வாய்ந்த பண்பை பெண்ணியம் என்ற பிழையான கருதுகோளுடன் தொடர்புபடுத்திப்  பார்க்கக்கூடாது. அது போன்றே பிற நடவடிக்கைகளும். அனைத்தும் பெண்கள் கைகளிலேயே தங்கி யுள்ளது.  இதிலிருந்து பெண் தனது வாழ்வில் அதிக நேரத்தைத் தன் வீட்டிலேயே செலவழிக்கவும், குடும்ப வாழ்க்கையைக் குலைக்காது நடத்தவும் வேண்டிய பொறுப்புக்கு உள்ளக்கப்பட்டு உள்ளமை தெளிவாகிறது. 

மேலும், அவள் படைக்கும் உடலமைப்பைப் கொண்டவளாகவிருப்பதால், அவளது மனம்போன போக்கில், முரனான வழிகளில் மேற்கொள்ளப்படும் நடத்தைகள், அவளுக்குப் பாதகமான நிலைகளை ஏற்படுத்தும். அதனால் அவள் அனைத்து வழிகளிலும் பாதிக்கப்படுவாள். அவளது படைப்புக்கள்கூட அவப்பெயருடன் சமூக அந்தஸ்தை இழந்து நிற்கும். இன்னும் அவளது இயற்கையமைப்பு, குறிப்பிட்ட கூடுதலான காலங்களில், தங்கி வாழும் நிலையை, பாதுகாப்பை, துணையை வேண்டி நிற்கிறது. கணவன் என்ற பெயரில் அவளுக்கு ஓர் ஆண் இராவிட்டால், அவளது கௌரவம், பாதுகாப்பு, இருப்பு, வாழ்வு போன்ற அனைத்தும் பாதிக்கப்பட்டு விடும். 

அதற்கடுத்தபடியாக அவள் பெற்ற  மக்கள் அவளுக்கு ஊன்றுகோலா கவும், பாதுகாப்புக் கேடயங்களாகவும் ஆகா நிலையைச் சற்று சிந்தித்துப் பாருங் கள். இவ்வமைப்பு மாறு பட்டுவிடில் பெண் என்பவள் கிள்ளுக் கீரையாகும் சந்தர்ப்பங்களும் அதிகரித்துவிடும். அதனால் எள்ளி நகையாடும் நிலைக்கும் ஆளாகி விடுவாள்.  இவையெல்லாம் பெண்ணுக்கு இயற்கை அளித்துள்ள பாதுகாப்பு. வரப்பிரசாதம். இத்தகு அம்சங்களை தன்னகத்தே கொண்டவள் தான் பெண். அதுதான் பெண்ணியமே தவிர, தற்போது பெண்ணியம் என்ற பெயரில்  எதிர்பார்க்கப்படும் தன்மைகளல்ல.

பெண்ணின் உடலமைப்பு, மனத்திடன், குணநலம், உடற்பலம் அனைத்தும் அவர்கள் தனித்து காரிய மாற்றும் தன்மை கொண்டனவல்ல என்பதை மேற்கண்டவற்றின் மூலம், மட்டுமல்ல சிறிது சிந்தித் தாலும் வெளியாகி விடும். படைத்தற்கு மட்டுமல்ல, அவளது இயல்பு வாழ்க்கைக்குக்கூட ஓர் ஆணின் அதாவது, தகப்பனின், சகோதரனின், கணவனின், மகனின், பேரன் களின் உதவி, பாதுகாப்பு தேவைப் படுகிறது. இது படைப்புத்  தொழிலைச் செய்ய வேண்டியதால் மட்டும் கொடுக்கப்பட்டதாக இருக்க முடியாது.  குடும்பச் சூழல், சமூக அமைப்பு, உறவு முறை, ஒருவரில் ஒருவர் தங்கி யிருத்தல் போன்ற இத்தியாதி காரணங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.  பெண்களில் ஏற்படும் பின்னோக்கிய செயற்கை மாற்றங்கள் அனைத்தையும் நலிவுறச் செய்து உலகையே அழிவுப் பாதையில் கொண்டு சேர்த்துவிடும். 

நாகரிகம், பெண்ணியம், சமவுரிமை போன்றவற்றைப் பேசிக்கொண்டு  மனம்போன போக்கில், தான் தோன்றிகளாகத் திரிய முற்பட்டால், அது  குறுகிய  காலத்துக்கு மட்டுமே சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். அதன் பின்னர் சாக்கடை வாழ்க்கையாகி தேடுவாரற்ற குப்பை களாக மாறிவிடுவர் என்பதை மனத்திலிருத்திச் செயல்படல் பெண்களுக் கும்,  உலகுக்கும் அவர்கள் செய்யும் சேவையாக அமையும்.
                                                                                                                                                          -  நிஹா  –

Sunday, June 16, 2013

ஈமானற்ற தொழுகை ஈடேற்றம் தருமா!

ஈமானற்ற தொழுகை ஈடேற்றம் தருமா!

ஒரு மனிதன் இஸ்லாமியனாக ஆவதற்குஆறு காரியங்களில்  நம்பிக்கை கொள்ள வேண்டும். அவை அனைவரும் அறிந்தவை. ஆயினும்,  விளக்கத் துக்காக: அல்லாஹ்வை, அவனது வானவர்களை, அவனது வேதங்களை, அவனது திருத்தூதர்களை, இறுதிநாளை, விதியை, தீர்ப்பை நம்பிக்கை கொள்ள வேண்டும்

இவ்வாறான விடயங்கள் உண்டு என்பதை அறிவதற்குள்ள ஓரே ஊடகம், அல்லாஹ் நமக்கருளியுள்ள வேதங்களாகும். வேத வெளிப்பாடுகளின் இறுதிக்கால மக்களாக நாம் இருப்பதால், இஸ்லாத்தையே நமக்குரிய வேதமாக அல்லாஹ் தேர்ந்து விட்டதாகக் கூறுகிறான். அதிலேயே நமக்கு விடிவு இருப்பதாகவும், அதல்லாவற்றால் எவ்வித பலனும் ஏற்படப்போவ தில்லை என்பதையும் தெளிவாகவே தெரிவித்துவிட்டான்.  காரணம் இறுதி வேதமாகவும், சம்பூரணமானதாகவும், பாதுகாக்கப்பட்டதாகவும் குர்ஆன் ஆக்கப்பட்டுள்ளதே!

வரிசைக்கிரமத்தில் ஏதாவது ஒன்று முன்னிடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்ற அடிப்படையில் அல்லாஹ்வுக்கு வானவர்களுக்கு அடுத்தபடியாகக் கூறப்பட்டிப்பினும், அல்லாஹ் குற்றம் பிடிக்காமல் இருக்க பிரார்த்தித்தவனாக, குர்ஆனே முதலில் அறியப்பட வேண்டியதாக உள்ளது. குர்ஆனை அறியாமல், அவனையோ, அவனது வார்த்தைகளை யோ, கட்டளைகளையோ, அறிவுரைகளையோ, அறிவித்தல்களையோ, உண்மைகளையோ, விளக்கங்களையோ, அவனது  சாட்சியங்களையோ பற்றி அறிந்து கொள்ளும் அதிகாரபூர்வ சாதனம் வேறில்லை என்றே கூறலாம். அதுவே யதார்த்தமும் யதார்த்தமானதுங்கூட.

ஆதலின், அனைத்துக்கும் முன்னதாக வேதங்கள் பற்றிய அறிவு பெறப்படுவதே ஓர் உண்மை முஸ்லிமாக காரியங்களைத் தொடக்க தேவைப்படுவது எனக் கூறின் அது மிகையல்ல.   குருட்டு நம்பிக்கை, அறிவில்லாத வணக்கங்கள்தீர்க்கமான ஞானமற்ற பின்பற்றல்கள் போன்றவற்றை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதில்லை என்பதும் அவனது கூற்றுக்களே! இவையெல்லாம் அல்லாஹ்விடமிருந்து, அவனது குர்ஆன் மூலம் பெறப்பட வேண்டியவை. அதில்தான் ஒவ்வொன்றைப் பற்றிய உண்மைகளும், விளக்கங்களும் நிறைந்து கிடக்கின்றன. நீர் எதுவும் அறியாதவராக இருந்தீர் என நபிகள் பெருமான் முஹம்மது ஸல் அவர் களையே கூறுவதில் இருந்து, அறிவோ, ஞானமோ அவனிடமிருந்தே வர வேண்டியுள்ளது அறியப்படுகின்றதுஅறியப்பட வேண்டிய இவ்வுண்மை களையே குர்ஆனாக்கி அடைவதில் இலகுத் தன்மையை ஏற்படுத்தி விட்டான் கருணையை நம்மேல் தனது கடமையாக்கிக் கொண்டுள்ள வல்ல நாயன் அல்லாஹ் சுபுஹானஹுவதஆலாஅல்ஹம்துலில்லாஹ்.

மேற்கண்டவை குர்ஆன் அறியப்படுவதன் முக்கியத்துவத்தையும், அது நாம் எவற்றில்?, எப்படி?  ஈமான்கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் விளாவாரியாக நமக்குக் கற்றுத் தருகின்றது. ஆக ஈமான் பூர்த்தி நிலை யை அடைவதற்கான அறிவுரைகளைத் தரும் சாதனமாக குர்ஆனே விளங்குவது, ஈமானின் முக்கியத்துவத்தை விளங்கப் போதுமானது.

ஈமான் கொண்டு இஸ்லாம் ஆகிய ஒருவனுக்கு சில கடமைகள் உண்டு. அவை அலலாஹ்வால் நமக்குப் பரிந்துரைக்கப் பட்டவை. அவற்றைச் செய்வதன் மூலம், இஸ்லாத்தின் நோக்கமான அல்லாஹ்வை அறிந்து, அவனது நெருக்கத்தைப் பெற இலகுவாக வழி சமைத்துள்ளான்.

விடயத்துக்கு வருமுன்னர், தற்போது, ஈமான் என்பது,பரிந்துரைக்கப் பட்டவைகள் உண்டு என அறிதலோடு நின்று விடவில்லை என்பதை தெளிவாக்கியுள்ளது. ஆக,குர்ஆனை அறிவதன் மூலமே அல்லாஹ்வின் ஏவல், விலக்கல் உட்பட அனைத்தையும்  அறிந்து அதன்படி  வாழ்வை அமைத்து வெற்றி பெறலாம் என்பது தெளிவாகின்றமையை உங்களில் யாரும் மறுக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன். இதனால் ஈமான் என்ற வெற்றிக்கு, குர்ஆனே முன்னிலையாகி நம்மை வழி நடத்துவால் அதன் இன்றியமையாமை வெளிப்படுகின்றது.

விடயத்துக்கு வந்தால், பெரும்பாலான இஸ்லாமியர் ஈமானைப் பதப் பிரயோகமாகவே அறிந்து வைத்துள்ளனர்தவிர, அதற்கு மேல் எந்தளவு தெரிந்துளளனர் என்பதை எடைபோட, குர்ஆன் அவர்கள் மத்தியில் பிடித்துள்ள இடம்மிக நன்றாகவே போதுமானதாக உள்ளது.

இஸ்லாம் ஐந்து தூண்களைக் கொண்டு கட்டி எழுப்பப்பட்டுள்ளது எனக் கூறிக் கொண்டு, கலிமாவைப் பாடம் பண்ணி வைத்துக் கொண்டு, தமது கடமை முடிந்து விட்டதாக நினைந்து, தொழுகையையும் ஸ்டீரியோ டைப் பாக செய்து கொண்டு, நோன்பை ஏதோ பிடிக்க வேண்டும் என்பதாகப் பிடித்துக் கொண்டு, ஸக்காத் என்ற பெயரில் எதனையோ செய்து கொண்டு, பெருமைக்காகவோ, பொழுது போக்குக்காகவோ, தமது வளத்தை, அந்தஸ்தை வெளிப்படுத்துவதற்காகவோ ஹஜ்ஜையும், உம்றா வையும் செய்து கொண்டிருக்கும் நிலையே மிக அதிகமாக காணப் படுகின்றது. அத்தோடு இஸ்லாம் நிறைவேறிவி்ட்டதாகவும், தாமே சொர்க் கத்தின் வாரிசுதாரர்களாகவும் நினைத்துக் கொண்டுள்ளமையே தற்போ தைய நிலை என்பது வெறும் கற்பனையல்ல.

இன்னும் கூறுவதாயின், சிலர், சில ஹதீதுகளின் துணையுடன் ஐவேளை தொழுதுவிட்டால் அனைத்தும் கிடைத்து விட்டது போலவும், வேறெதுவும் அறியவோ, செய்யவோ  தேவையில்லை என்பது போலவும் ஒரு மாயை யில் திளைத்துள்ளனர். அதனை மேலும் வலியுறுத்துவதாக சிலர் இயக் கங்களாக தொழ அழைப்பதையே தொழிலாக்கிக் கொண்டுள்ளனர். அவர்கள் கலிமா பற்றியோ, ‌தொழுகை என்றால் என்ன என்பது பற்றியோ மற்றுமுண்டானவைகள் பற்றியோ,விஷேடமாக ஈமான் என்பது பற்றியோ எவ்வித முயற்சியுமற்று இருக்கின்றனர்.

நாயகம் ஸல் அவர்களுக்கே முழுமையாக இஸ்லாத்தில் நுழைந்து விடுங்கள் எனக் கூறியிருப்பதனை எவராவது  உற்று நோக்குவார்களா யின் தமது நிலையை தாம் அறிந்து கொள்வர்.

ஈமானில் கூறப்பட்டவைகளான அல்லாஹ், வானவர், ரசூல்மார், இறுதி நாள், கலா, கத்ர் என்பவை எல்லாம் கூட, நிறைந்த பிரயாசையின் பேரில் அறிந்து கொள்ள வேண்டியவை, ஆனால், மிகக் குறைந்த பிரயாசையுடன் அறிந்து கொள்ளும் வகையில், இலகுவாக, தெளிவாக, விளக்கமாக, சிறுசிறு உதாரணங்களுடன் நமக்காகவே இறக்கி அருளப்பட்ட அல் குர்ஆன், தற்போது நாமறிந்த பாஷைகளில் கிடைத்திருப்பது நாம் செய்த பாக்கியம் என்றே கூறவேண்டும். அதனையும் அறியாமல் நாம் காலம் கடத்துவோமாயின், நிச்சயமாக நாம் நஷ்டவாளிகளாகவே இருப்போம். காரணம், வெற்றிக்கான வழிகளைக் கூறிக் கொண்டிருப்பது குர்ஆன் ஒன்றே!

நமது கண்மணி நாயகம் ஸல் அவர்களை வழி நடத்தியதும் குர்ஆனே! அவர்களுக்கு முதன்முதல்அறிவூட்டப்பட்டதும் குர்ஆனைக் கொண்டே என்பதை நாமறிதல், நம் முயற்சியை இலகு படுத்திவிடும்.

ஈமான் பூர்த்தியாகாத நிலையில் செய்யப்படும் கடமைகள் எந்தளவு அல்லாஹ்வால் ஏற்கப்படும் என்பதனை நாமே உணர்ந்து கொள்வது, நமது ஆன்ம முன்னேற்றத்துக்கு, இறைநெருக்கத்தைப் பெற்றுக் கொள் ளும் வழிவகைகளைக் கண்டறிய வேண்டும் என்பதை அறிய வைக்கும். அல்லாஹ் தனது அருள் மறையின் 5:35 இல், இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன்பால் நெருங்கு வதற்குரிய வழியைத் தேடிக்  கொள்ளுங்கள்... எனக் கூறியிருப்பதனை அறியவும் கூட குர்ஆனே நமக்கு உதவுகின்றது. ஆதலால், ஈமானற்ற காரியங்கள் இலக்கின்றிச் செய்யப்படுவதாகவே அமையும்.

குர்ஆன் அறியப்படாதததாலேயே தொழுகை என்றால் என்ன என்பதுகூட அறியப்படாத நிலையில் ஆற்றப்படுகின்றது. அப்படியே அனைத்துக் கடமைகளும் விளக்கமில்லாச் செயல்களாக, யாரோ கூறியதை கர்ண பரம்பரையாகச் செய்து கொண்டு இருப்பதாகவே அமைந்துள்ளது. அது இறை எதிர்பார்ப்பை நிறைவு செய்துள்ளதா என்பதும் கேள்வியே! அதனை, “ தொழுகையாளிகளுக்குக் கேடுதான்என்ற அல்லாஹ்வின் சாபம் நன்கு விளங்க வைக்கும்.

தலையங்கம் கூறியபடி, ஈமானற்ற தொழுகை ஈடேற்றம் தருவதில் ஏற்பட்டுள்ள சிக்கலைத் தீர்க்கவல்லதும், புனித மாமறை குர்ஆனே! குர்ஆனை அல்லாஹ் ஈமான் கொள்ளும்படி கூறியிருப்பதன் கருத்து, குர்ஆன் என்ற ஒன்று உண்டு என்பதாக நம்பிக்கை வைப்பதல்ல. மாறாக அக்குர்ஆனில் உள்ளவைகளை ஐயந்திரிபற அறிந்து நமது வழியைக் கண்டறிவதே!

எப்போது குர்ஆன் அறியப்படாமல். விடப்படுமோ அப்போது நாம் ஈமானை விட்டும் சறுகிய நிலையை அடைகிறோம். அப்போது நமது கடமைகள் கூட ஈமானற்ற நிலையில் செய்தவையாக மாற்றம் பெறுகின்றன. அல்லாஹ்வின் கட்டளையான குர்ஆனை அறியுங்கள் என்பதும் புறக் கணிப்புக்கு உள்ளாகிவிடுவதுடன், அதுவே நிராகரிப்பாகவும் மாறி விடுகின்றது. மேலும், மனோஇச்சை என்ற பண்பை அடைந்து ஷிர்க் ஆகவும் மாறிவிடும் அபாயமுமுள்ளதே!

குர்ஆனிய அறிவு நம்மிடம் இல்லை என்பதன் சுருக்கமான கருத்து, நம்மி டம் ஈமானும் இல்லை என்பதே! அப்படியல்ல உண்டு என யாரும் கூறு வார்களாயின், அது குருட்டு நம்பிக்கையே! இது ஏற்கப்பட்டதல்ல என்பது டன் மலட்டுத் தன்மையுடையதாகவே இருக்கும் என்பதுவுமே  உண்மை!

அல்லாஹ்வின் நாட்டமின்றேல் நமக்கு சரியான வழி கிடைக்கப் போவ தில்லை  என்பதால் அவனிடமே அழுது மன்றாடி அவனருளைப் பெற முயற்சிப்போமாக! அல்லாஹ் நம்மனைவரையும் முஸ்லிம்களாக மரணிக்கச் செய்வானாக! நமது ஈமானைப் பலப்படுத்துவானாக! அம் முயற்சியில் நம்மை ஈடுபடும் சிந்தனையை, ஊக்கத்தை, பலத்தைத் தருவானாக! ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்!

- நிஹா -

முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு பாதை செப்பணிடவே வருகை தந்தனராம்

Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு பாதை செப்பணிடவே வருகை தந்தனராம்

முஸ்லிம்கள் பற்றியும் அரசியல்வாதிகள் பற்றியும்  தேரர் கூறும் கருத்துக்கள், அவரது பண்பு தவறிய பதப் பிரயோகங்கள், அவரது சொந்த அவதூறும்,  அடிப்படையற்ற வரலாறு பற்றிய புழுகுகளும், முறையற்ற குற்றச் சாட்டுக்களும், மூர்க்கத்தனமான கூப்பாடும் அவரது முட்டாள்தனத்தையும் பசசைத் துவேஷத்தையும், மேடைக் கலாசாரத்தை பாழ்படுத்துவதும், அவர் பின்பற்றும் புத்த தர்மத்துக்கு இழுக்கையும், அணிந்திருக்கும் ஆடைக்கு அபகீர்த்தியையும் ஏற்படுத்துவன. 

மேலும் நாட்‌டில் நடைமுறையிலுள்ள யாப்பின் பகுதி ஒன்று செல்லாமல் ஆகிவிட்டதென்கின்றார். இது இந்நாட்டின் யாப்பை அவமதிப்பதாகும். எப்படி மதத்தை ஒருவன் மதிக்கின்றானோ அப்படி நாட்டின் யாப்பையும் மதிக்க வேண்டும். மதம் மனிதனால் மட்டும் மதிக்கப்படுவது, ஆனால், யாப்பு நாடால் மதிக்கப்படுவது மட்டுமல்ல, நாட்டையே ஆளுவது, நாட்டின் உயிர்நாடி போன்றது என்பதை தேரர் உணராவிடில் சம்பநதப்பட்டவர்கள் உணர்த்த வேண்டும். 

இனங்களுக்கிடையில் மதவிரோதப் பொய்யைக் கட்டவிழ்த்து விட்டு, தரமற்ற முறையில் விமர்னசனங்கள் செய்து கொண்டிருப்பதன் மூலம் நாட்டின் ‌அமைதிக்குப் பங்கம் விழைக்க முனைகின்றார். 

இவரது போக்கில் முஸ்லிம்களும் செல்ல முனைந்தால் இந்த நாடு பிணக்காடாகவே மாறும். ஆனால், அவர்கள் அறிவீனர் களைப் புறக்கணித்து விடுமாறு கூறியதற்கொப்பவும், பொய்யர்களுடன் தர்க்கம் செய்வது குழப்பத்தை மட்டுமே உண்டு பண்ணும் என்பதனாலும், ஒரு குழப்பக்காரரின் பேச்சுக்கு பதில் கொடுத்து முழு பௌத்தர்களின் மனதை நோக வைக்கக் கூடாது என்ற பெருமனதுடனும் உள்ளனர்

Saturday, June 15, 2013

“பந்தாடப்படும் மாகாணசபை அதிகாரங்களை முன்நிறுத்தி முரண்படும் தமிழ்-முஸ்லிம் அரசியல்”

Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

“பந்தாடப்படும் மாகாணசபை அதிகாரங்களை முன்நிறுத்தி முரண்படும் தமிழ்-முஸ்லிம் அரசியல்”


பார‌ாளுமன்றக் கதிரைகளை நிரப்புதல், அரசியல் அதிகாரங்கள் பெறுதல் போன்ற சுயநல கருத்தியலை விடுத்து சமூக நலனை முன்னிலைப்படுத்தும், இனங்களின் சுபிட்சத்தை, நல்லுறவை, அதன் மூலம் அவர்களுக்குரிய உரிமைகளை வென்றெடுக்கும் சிந்தனை தற்போதைய முஸ்லிம், தமிழ அரசியல்வாதிகளிடம் மிளிராதவரை சிறுபான்மையினரின் பிரச்‌சினைக்கு விடிவு என்பதே வரப்போவதில்லை.  

அப்படியொரு மாற்றத்தைத் தம்மில் ஏற்படுத்திக் கொள்ளும் பக்குவம் கொண்ட தமிழ் - முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நம்மத்தியில் இருப்பதாகவும் தெரியவில்லை அல்லது அப்பண்பு தம்மிடம் இருப்பதாக வெளிப்படுத்திக் கொள்ளவுமில்லை என்பதையும் அவர்தம் செயற்பாடுகள் பட்ம் போட்டுக் காட்டுகின்றன.

ஆதலால், தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இணைந்து தம்மில் தாமாகவே மாற்றங்களை ஏற்படுத்துவதுதான தக்க வழி எது என்பதை உணர்ந்து அவ்வழிவகைகளசை் சிந்தித்து செயல்படுத்த வேண்டும். உண்மையான சமூக ஆர்வலர்கள் இதில் முக்கிய பங்காற்ற வேண்டும்.  அதுவே தற்போதைக்கு அத்தியாவசியம் தேவைப்படுவது, பொதுப் பிரச்சினையை வென்றெடுப்பதற்கு தம்முள் காணப்படும் அபிப்பிராய பேதங்களை தீர்ப்பதும், தள்ளி வைப்பதும், விட்டுக் கொடுப்பதும் ஏற்கப்பட்ட நன்மை தரும் உண்மைகள். 

இந்த நாடும், சிறுபான்மைத் தமிழ், முஸ்லிம்களும் ஓர் அரசியல் தீர்வை வேண்டி நிற்கின்றார்கள். அது கௌரவமானதாகவும், பிரி‌வினையை ஏற்படுத்தாததாகவும், சமவுரிமையுடன், அவரவர் மதத்தை, மொழியை,  கலாசாரத்தை, பொருளாதார நடவடிக்கைகளை இடையூறின்றி, சுதந்திரமாக முன்னெடுத்து வாழத்தக்கதாகவும், நிலையானதாகவும் அமைய வேண்டும்.