Wednesday, April 9, 2014

மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு பொதுபல சேனா எதிர்ப்பு

வடக்கு முஸ்லிம்களை அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பிரதேசத்தில் இருந்து பயங்கரவாதப் புலிகள் 1990இல் பலவந்தமாக விரட்டி இனச் சுத்திகரிப்பொன்றை அரங்கேற்றிய போது,தடுத்து நிறுத்தி இருக்க வேண்டிய அரசு, இதுவரை அவர்கள் விடயத்தை அரசியல் இலாபங்களுக்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றது.

அதனால் அவர்கள் தமது இழ்ப்புகளுக்கான எவ்வித நட்ட ஈடுகளையும் எங்கிருந்தும் பெற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் தம் பாரம்பரிய தாயகமான வாழ்விடத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இருபத்து மூன்று வருடங்களாகியும், அப்புலிகள் தோற்கடிக்கபபட்டு ஐந்து வருடங்களாகியும், அவர்களுக்கு எவ்வித நியாயமும் கிடைக்காத நிலையில், மீள் குடியேற்றம் என்ற பெயரில் அவர்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள்.

போதாக்குறைக்கு அவர்கள்பொது பல சேனா போன்ற மதப் பயங்கரவாத அமைப்புக்களின் மூலம் பலத்த மன உளைச்சல்களுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.

இதனை அரச அதிகாரிகளும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது, அரசின மாற்றாந் தாய் மனப்பான்மையை மட்டுமல்ல வடக்கு முஸலிம்கள் விடயத்தில் அது கொண்டுள்ள கரிசனை இன்மையை தெளிவாக வெளிப்படுத்துகின்றது. ஆக, புலிகள் செய்த அதே இனச் சுத்திகரிப்பை இன்னோர் முறையில் தொடர்கின்றனர் என்றே கூற வேண்டும்.


- நிஹா -

No comments: